டெல்லி : மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் 100 நாள் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த 100 நாள் திட்டத்தில் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆமாங்க.. நூறு நாள் திட்டத்தில் வட கிழக்கு மண்டலங்களில் 200 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் பிற பகுதிகளை வட கிழக்கு பகுதியுடன நெருக்கமாக கொண்டு வருவதற்கான இலக்கு அணுகுமுறையை மனதில் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது மத்திய அரசு.
ரூ.3000 கோடியில் புதிய திட்டங்கள்
100 நாள் திட்டங்களில் Development of North Eastern Region (DoNER) எடுத்துள்ள முடிவுகளில் சுமார் 200 புதிய திட்டங்களில் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இந்த திட்டத்தின் படி, பல திட்டங்களை அனுமதித்தல், அல்லது தொடங்குதல், அல்லது நிறைவு செய்தல் அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு திட்டங்களுக்கு 30 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், Development of North Eastern Region அமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறியுள்ளார்.
மோடி அரசு வடகிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை
அதிலும் நாட்டில் இதுவரை புறகணிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நரேந்திரமோடி தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்துள்ளது. ஆமாங்க.. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டவற்றில் வடகிழக்கு மண்டலமும் ஒன்றாகும். பிரதமர் மோடியின் முதல் பதவிக்காலத்தில், முதன்மை கவனம் வடகிழக்கு பகுதிகளை, இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் நெருக்கமாக கொண்டு வருவதாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் மற்ற பகுதிகளை வடகிழக்கு பகுதிகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதாக இருந்தது.
அசாமில் தொழிற்பூங்கா!
இந்த நிலையில் தற்போது அதே நெறிமுறைகள் மற்றும் இலக்குடன் நெறிமுறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் தொடர்கின்றன. இந்த நிலையில் இந்த திட்டங்களின் முக்கிய அம்சமாக, அசாம் மாநிலத்தின், டிமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள மாண்டெர்டிசாவில் 75 ஹெக்டேர் பரப்பளவில் 50 கோடி ரூபாய் செலவில் மூங்கில் தொழிற்துறை பூங்கா ஒன்று அமைக்கப்படுகிறது.
பல திட்டங்களில் முதலீடு!
Non Lapsable Central Pool of Resources (NLCPR) உள்ளிட்ட 36 திட்டங்களில் 529.18 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளனவாம். மேலும் இரண்டு திட்டங்கள் 89.63 கோடி ரூபாய் செலவில் இரண்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதே காலத்தில் 26.83 கோடி ரூபாய் அளவில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications