இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 5 வருடத்தில் பல முக்கியத் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளின் காரணமாக நிலையான வளர்ச்சியை அடைந்தது. இதற்கு அரசின் தொடர் கொள்கை மாற்றங்களும், அரசு திட்டங்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகங்களுக்குச் சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுக்கு வெறும் 2 வருடத்தில் 100 சதவீத லாபத்தை அடைவார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது.
முக்கிய அறிவிப்புகள்
திங்கட்கிழமை நடந்த வருடாந்திர கூட்டத்தில், ஜியோ நிறுவனத்தின் பிராண்ட்பேன்ட் திட்ட அறிமுகம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கூட்டணி, சவுதி ஆராம்கோ நிறுவனத்துடனான டீல் என 3 அதி முக்கிய அறிவிப்புகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டது.
இந்த அறிவிப்பினால் அடுத்த ஒரு வாரத்திற்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சந்தை மூலதன நிறுவனமாக உயர உள்ளது.
சிறந்த வருடாந்திர கூட்டம்சிறந்த வருடாந்திர கூட்டம்
கடந்த 10 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இந்த வருடாந்திர கூட்டத்தில் தான் எனப் பல முன்னணி முதலீட்டு சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளது.
இதில் மிக முக்கியமானது, சவுதி ஆராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளுக்குச் சுமார் 15 பில்லியன் டாலர் கொடுக்க உள்ளது. இந்தத் தொகை ரிலையன்ஸ்-ன் கடன் அளவை பெரிய அளவில் குறைக்கப் பயன்படும். இதன் மூலம் இந்நிறுவனத்தின் பேலென்ஸ் ஷீட் வலிமை பெற்றுச் சந்தையில் இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு தாறுமாறாக உயர வழி வகுக்கும்.
மதிப்பீடு
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் 100 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் அடுத்தச் சில காலாண்டுகளுக்குள் 140-150 பில்லியன் டாலர் வரையில் உயரும்.
இதோடு அடுத்த 24 மாதம் அதாவது 2 வருட காலத்தில் இந்நிறுவனத்தின் மதிப்பு 200 பில்லியன் டாலர் வரையில் உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
முதலீடு
2 வருடத்தில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் சந்தை மதிப்பு 2 மடங்கு அதிகரிக்கும் போது இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகையும் இரட்டிப்பாக வாய்ப்புகள் உள்ளது.
ஆகையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் நீங்கள் தற்போது 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 24 மாதத்தில் இதன் மதிப்பு 10 லட்சம் வரையில் உயர வாய்ப்புகள் உள்ளது எனப் பங்குச்சந்தை வல்லுனர் சுஷில் கூறியுள்ளார்.
ஜியோ
உதாரணமாக ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட போது (செப்.5 2016) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு வெறும் 506 ரூபாய் மட்டும் தான். ஆனால் மே மாதத்தின் போது இந்நிறுவன பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1400 ரூபாய் வரையில் உயர்ந்தது.
தற்போது சர்வதேச மற்றும் இந்திய பொருளாதாரத்தின் சரிவின் காரணமாகத் தற்போது 1161 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. யாருடைய கூட்டணியும் இல்லாமல் வெறும் 3 வருடத்தில் 100% மேல் லாபம் அடைந்துள்ள நிலையில், ஆராம்கோ, மைக்ரோசாப்ட் கூட்டணியுடன் நிச்சயம் 2 வருடத்தில் 100 சதவீத லாபத்தை அடையாதா என்ன..?
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications