டெல்லி : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அறிமுகப்படுத்தியுள்ள JioFiber பிராட்பேண்ட் திட்டங்கள் லேண்ட்லைன் இணைப்பு மற்றும் எச்டி, 4 கே செட் அப் பாக்ஸ் மற்றும் ஜியோவின் இண்டர்நெட் ஆப் திங்ஸ் அணுகலுடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மற்ற பிராட்பேண்ட் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தாலும், பல கேபிள் நிறுவனங்களுக்கு இது நல்ல வாய்ப்பை வழங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த ஜியோ பைஃபர் திட்டத்திற்காக, பல கேபிள் நிறுவனங்களின் தேவை ஜியோவுக்கு இருப்பதால், அந்த கேபிள் நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பிருக்கிறது என்றும், இதனால் சிலர் வாங்க கூட வாய்ப்புகள் இருப்பதாக அத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பிராட்பேண்ட் சந்தையை சீர்குலைக்கும்
இந்த நிலையில் ஜியோ ஆரம்பித்த போது இந்த நிறுவனம், எந்த அளவுக்கு பல நிறுவனங்கள் பிரச்சனையை மேற்கொண்டனவோ, சந்தையை சீர்குலைத்தனவோ, அதேபோல் இந்த ரிலையன்ஸின் ஜியோ பைஃபர் திட்டத்தினாலும் பிராட்பேண்ட் சந்தை மேலும் சீர்குலைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க.. பிராட்பேண்ட் சந்தையில் இந்த ஜியோ பைஃபர் திட்டம் அதிரடியான பல மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து செயல்படலாம்
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று, இத்திட்டத்தினை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி, இந்த பிராண்ட்பேன்ட் சேவைக்கு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும், இதனால் இந்த பிராட்பேண்ட் சேவையை விரைவாக விரிவாக்கம் செய்ய முடியும் என்றும் கூறியிருந்தார்.
பல நிறுவனங்களை வாங்க கூடும்
இந்த நிலையில் இந்தியாவில் 1,00,000 எல்.சி.ஓக்கள் இருக்கிறார்கள், இதோடு 1,100 மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர்ஸ் இருக்கிறார்கள். இவர்கள் திரட்டிகளாக இருக்கின்றனர். இவர்கள் கடைசி மைல் இணைப்பு வரை இணைந்திருக்கிறார்கள். ஆக இந்த நிலையில் ரிலையன்ஸ் இவர்களுடன் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ், ஜியோ பைஃபர் திட்டத்திற்காக மேலும் பல கேபிள் நிறுவனங்களை வாங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
பல மடங்கு இலக்கு
இந்த நிலையில் உள்நாட்டு கேபிள் டிவி சந்தையின் தன்மையை கருத்தில் கொண்டும், கடைசி மைல் இணைப்பின் தேவை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, அடுத்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ், 1,600 நகரங்களில், 20 மில்லியன் வீடுகள் மற்றும் 15 மில்லியன் வணிக நிறுவனங்களை, அதன் பிராட்பேண்ட் சேவையை அடைய வேண்டும் என்று இலக்கு வைத்திருப்பதாகவும், இதற்காக இன்னும் பலவற்றை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறதாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications