சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனம் வாகனக் கடன்களைக் கொடுக்கும் நிறுவனம். இவர்கள் இப்போது புதிதாக ஒரு வீட்டுக் கடன் கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்க இருக்கிறார்களாம்.
சோழமண்டலம் நிதி நிறுவன குழுமத்தில், ஒரு வீட்டுக் கடன் நிறுவனம் இருந்தால், அது கடன் வளர்ச்சியை விரைவில் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் அந்நிறுவனத்தின் இயக்குநர் அருண் அழகப்பன்.

புதிதாக சோழமண்டலம் நிதி நிறுவனம் தொடங்க இருக்கும் வீட்டுக் கடன் நிறுவனம் மலிவு விலை வீடுகளை வாங்கும் நபர்களை, இலக்காக வைத்து வியாபாரம் செய்யப் போகிறார்களாம். அதாவது கடன் கொடுக்கப் போகிறார்களாம். அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளருக்கு வீட்டுக் கடனாக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப் போகிறார்களாம்.
வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் வீடு கட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறது. அரசு திட்டங்கள் படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கும் திட்டங்களால் மலிவு விலை வீடுகளுக்கான கடன் அதிகரித்தது. மக்களும் வீடுகளை வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாங்கள் இந்த வீட்டுக் கடன் துறையில் பெரிய வாய்ப்புகளைப் பார்க்கிறோம். எங்களால் யாருக்கு எல்லாம் கடன் கொடுக்க முடியுமோ அவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அருண் அழகப்பன்.
வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்திய நகர் புறங்களில் சுமாராக 10 மில்லியன் வீடுகளை கட்ட இந்தியா திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 13, 2019 வரை மட்டும் சுமாராக 2.64 மில்லியன் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன. இதை மத்திய வீடுகள் மற்றும் நகர்புற விவகாரத் துறையே சொல்லி இருக்கிறது. இன்னும் பாக்கி வீடுகள் கட்டப்பட வேண்டி இருக்கிறது.
சோழமண்டலம் நிதி நிறுவனம் வைத்திருக்கும் 2,600 கோடி ரூபாய் வீட்டுக் கடன் கொடுப்பதற்காக வைத்திருக்கும் பணத்தை, புதிய வீட்டுக் கடன் நிறுவனத்துக்கு முறையாக அனுமதிகள் எல்லாம் கிடைத்த பின் பரிமாற்றம் செய்து தங்கள் வியாபாரத்தைத் தொடங்கப் போகிறார்களாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications