சமீபத்தில் காபி டே நிறுவனத்தின் தலைவர் வி ஜி சித்தார்த்தா கூட, கடுமையான கடன் தொல்லை மற்றும் தன்னை வருமான வரித் துறை சார்ந்த அதிகாரிகள் அவமானப்படுத்தி தன் பங்குகளை பறிமுதல் செய்ததாகச் சொல்லி இருந்ததாக ஒரு கடிதத்தில் இருந்தது. அந்த பிரச்னைகளுக்கு விடையளிக்கும் விதத்தில் தற்போது ஒரு அதிரடி முடிவை மத்திய நிதி அமைச்சகம் எடுத்து இருக்கிறது.
வரும் அக்டோபர் 01, 2019 முதல் வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் என அனைத்து விஷயங்களும் மத்திய அலுவலகத்தின் அனுமதியோடு, கணினி வழியாகத்தான் அனுப்பப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

அதோடு இந்த கணினி வழியாக கொடுக்கப்படும் அனைத்து விஷயங்களுக்கு ஒரு டி ஐ என் (DIN - Document Identification Number) இருக்கும். அப்படி இல்லாத வருமான வரித் துறை சார்ந்த டாக்குமெண்ட்கள் ஏற்றுக் கொள்ளத் தேவை இல்லை எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு அக்டோபர் 01, 2019-க்கு முன் கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து வருமான வரித் துறை சார்ந்த ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்தும் புதிதாக கணினி வழியாக அனுப்பப்பட வேண்டும் அல்லது அக்டோபர் 01, 2019-க்குள் அந்த ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் தொடர்பான விஷயங்கள் ஒரு முடிவுக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
மிக முக்கியமாக வருமான வரித் துறையில் இருந்து வரி செலுத்துபவர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படும் ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்து பதில் அளிக்கத் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆக இனி வி ஜி சித்தார்த்தா போல ஒருவர் வருமான வரித் துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என நம்பலாம். அதே நேரத்தில் கூடுதலாக செலுத்தி இருக்கும் வருமான வரிகளையும் விரைவில் வரி செலுத்தியவருக்கு திருப்பிக் கொடுக்க வழி வகை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications