சமீபத்தில் காபி டே நிறுவனத்தின் தலைவர் வி ஜி சித்தார்த்தா கூட, கடுமையான கடன் தொல்லை மற்றும் தன்னை வருமான வரித் துறை சார்ந்த அதிகாரிகள் அவமானப்படுத்தி தன் பங்குகளை பறிமுதல் செய்ததாகச் சொல்லி இருந்ததாக ஒரு கடிதத்தில் இருந்தது. அந்த பிரச்னைகளுக்கு விடையளிக்கும் விதத்தில் தற்போது ஒரு அதிரடி முடிவை மத்திய நிதி அமைச்சகம் எடுத்து இருக்கிறது.
வரும் அக்டோபர் 01, 2019 முதல் வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் என அனைத்து விஷயங்களும் மத்திய அலுவலகத்தின் அனுமதியோடு, கணினி வழியாகத்தான் அனுப்பப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

அதோடு இந்த கணினி வழியாக கொடுக்கப்படும் அனைத்து விஷயங்களுக்கு ஒரு டி ஐ என் (DIN - Document Identification Number) இருக்கும். அப்படி இல்லாத வருமான வரித் துறை சார்ந்த டாக்குமெண்ட்கள் ஏற்றுக் கொள்ளத் தேவை இல்லை எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு அக்டோபர் 01, 2019-க்கு முன் கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து வருமான வரித் துறை சார்ந்த ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்தும் புதிதாக கணினி வழியாக அனுப்பப்பட வேண்டும் அல்லது அக்டோபர் 01, 2019-க்குள் அந்த ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் தொடர்பான விஷயங்கள் ஒரு முடிவுக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
மிக முக்கியமாக வருமான வரித் துறையில் இருந்து வரி செலுத்துபவர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படும் ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்து பதில் அளிக்கத் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆக இனி வி ஜி சித்தார்த்தா போல ஒருவர் வருமான வரித் துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என நம்பலாம். அதே நேரத்தில் கூடுதலாக செலுத்தி இருக்கும் வருமான வரிகளையும் விரைவில் வரி செலுத்தியவருக்கு திருப்பிக் கொடுக்க வழி வகை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications