இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை அறிவோம். அதோடு பலரின் வியாபாரம் காலி ஆனது, டீலர்கள் வியாபார்ம இல்லாமல் கடைக்கு பெரிய பூட்டு போட்டுச் சென்றது, அதனால் சுமார் 30,000 பேர் தங்கள் வேலையை இழந்தது, ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்களும் தங்களுக்கான தேவை மிகவும் குறைந்து இருப்பதால் போதுமான உற்பத்தி செய்ய முடியாமல் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது என ரண களமாக காட்சி அளிக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை
இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் விதத்தில் இப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆடோமொபைல் துறையை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.
இது நாள் வரை அரசுத் துறைகள் புதிய வாகனங்களை வாங்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு ஏன் பழைய வாகனங்களை புதுப்பிக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அந்தத் தடைய இப்போது நீக்கி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆக இனி அரசுத் துறைகள், அமைச்சகங்கள் பலரும் தங்கள் பழைய வாகனங்களை மாற்றிக் கொள்வது அல்லது புதிய வாகனங்களை வாங்குவது என களத்தில் இறங்குவர்கள். இதனால் கொஞ்சமே கொஞ்சம் ஆட்டோமொபைல் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
மார்ச் 2020-க்குள் வாங்கப்படும் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களின் பதிவு காலம் முடிவடையும் வரை அவைகள் செயல்பாட்டில் இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு 2020-க்குப் பிறகும் இந்த பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை தாராளமாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் விற்பனையை அதிகரித்து தேவையை அதிகரிக்க இருக்கிறார்களாம். அதற்கு வாகன பதிவுக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற விஷயத்தை தற்போது அரசு கைவிடுகிறதாம்.
இந்திய ஆட்டோமொபைல் துறை இப்படி சரிவு காணத் தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு அரசுக்கு, ஆட்டோமொபைல் துறையில் நிலவும் பிரச்னை புரிந்து இருக்கிறது. இனியாவது அரசு ஆழமாக யோசித்து உதவுவார்கள் என நம்புகிறார்கள் தொழிலதிபர்கள்.