டெல்லி : பிரதமர் மோடி 2.0 அரசு வந்த பின், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க, தொடர்ந்து பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிர்மலா சீதாரமன் பல பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை சீர்படுத்த இந்த பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, பெரிதும் உதவும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், வங்கிகளும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சரி முன்னர் 27 பொதுத்துறை வங்கிகளாக இருந்த நிலையில், தற்போது 12 பொதுத்துறை வங்கிகளாக மட்டுமே செயல்படும் என்றும் கூறியுள்ள நிலையில், இதற்காக ஊழியர்களுக்கும் சரி, வங்கிகளுக்கு சரி, புது விதமான புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த இணைப்பிற்கு பிறகு வங்கி இயக்குனர்களுக்கு சிறந்த ஒரு நோக்கங்களுக்காக தனியாக பயிற்சி வழங்கப்படும் என்றும், இது குறித்தான ஆணை விரைவில் வாரியங்களுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தவிர நிர்வாகக் குழுக்களில் இயக்குனர்களுக்கு நீண்ட கால விதிமுறைகள் வழங்கப்படும் என்றும், இது தவிர இந்த பொதுத்துறை வங்கிகளுக்கு Chief Risk Officer என்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு இந்த இணைப்பினால் வாடிக்கையாளர்களுக்கு, எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்றும், இதற்காக ஒன்றிணைக்கப்பட்ட வங்கிகள், ஒரே தொழில்நுட்ப மேடையே வழங்க நாங்கள் உறுதி கொண்டுள்ளோம் என்றும், நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த இணைப்பின் மூலம் பஞ்சாப் நேஷனல் பேங்க் இரண்டாவது பொதுத்துறை வங்கியாகவும், கனரா வங்கி 4 வது பெரிய பொதுத்துறை வங்கியாகவும், யூனியன் பேங்க் 5 வது பெரிய பொதுத்துறை வங்கியாகவும், இந்தியன் பேங்க் 7 வது பொதுத்துறை வங்கியாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வங்கிகள் முன்ன இருந்ததை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், கடன் வழங்குதலும் அதிகரிக்கும் என்றும், இதனால் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்றும் நிபுனர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications