மும்பை: நீண்ட நாட்கள் கழித்து சந்தை கொஞ்சம் நல்ல செய்திகளால் மேல் நோக்கி சீராக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்திய சந்தைகளைப் பிடித்திருந்த கெட்ட நேரம் விட்டு விட்டதா இல்லை வேறு சில காரணிகளால் சந்தை இன்னும் இறக்கத்தை சந்திக்குமா என தற்போது இருக்கும் உலக பொருளாதார சூழலில் கணிக்க முடியவில்லை எனச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இன்று சந்தை கொஞ்சம் மேல் நோக்கி நகர தனியார் வங்கி பங்குகள் பெரிய அளவில் உதவின. இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் தனியார் துறை சார் பங்குகள் இண்டெக்ஸ் 1.41 சதவிகிதம் அதிகரித்து சந்தையில் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது. எனவே இன்றைய தேதியில் எந்த பங்குகள் என்ன விலையில் நிறைவு அடைந்து இருக்கிறது. இன்றைய குளோசிங் விலை என்ன, இன்றைய குளோசிங் விலை அடிப்படையில் ஒவ்வொரு தனியார் வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு என்ன..? என விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.
அடுத்த வார வர்த்தக நாளில் ஏதாவது நல்ல தனியார் வங்கிகளின் பங்குகள் சிறப்பாக விலை ஏறும் எனத் தோன்றினால் வாங்கி நல்ல லாபம் பாருங்கள். ஆனால் வாங்குவதற்கு முன் அந்த வங்கியைப் பற்றி தீர விசாரித்து, நன்றாக அலசி ஆராய்ந்து, படித்து தெரிந்து கொண்டு வாங்குங்கள். நீங்கள் தேர்வு செய்து முதலீடு செய்யும் பணம் வளர வாழ்த்துக்கள்.