டெல்லி : நலிந்து வரும் பொருளாதார மந்த நிலையை போக்க ஏதேனும் நடவடிக்கை இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே, நாங்கள் இ-சிகரெட்டை தடை செய்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
வழக்கமாக பொருளாதாரம் குறித்து நடவடிக்கை என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டுவதும், பின் இது போன்ற அறிக்கைகளை கூறுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் மாணவர்களிடையே 78 சதவிகிதம் அதிகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் 900 சதவிகிதம் பேர் இந்த இ-சிகரெட் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும், இதே 300 மில்லியன் அமெரிக்க மக்கள் இந்த இ-சிகரெட் உபயோகப்படுத்துகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் இந்த இ சிகரெட்டால் 7 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக இந்த இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளதாகவும், இது தவிர சேமிப்பு மற்றும் இது குறித்தான விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையானது இன்றைய இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இன்று காலையிலேயே டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லமான 7 லோக் கல்யாண் மார்கில், இ-சிகரெட்டுகளின் உற்பத்தி, விநியோகம், கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்கைகளை குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்தது என்று கூறப்பட்டது.
இந்த நிலையிலேயே நிர்மலா சீதாராமன் இப்படியொரு அறிவிப்பை கொடுத்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில் தமிழக அரசு இந்த சிகரெட்டை தடை செய்து ஒரு வருடம் ஆகிய நிலையில், மத்திய அரசு தற்போது தான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணேய் விலை கொழுந்து விட்டு எரியும் இந்த நிலையில், இந்தியாவில் இதன் எதிரொலி எப்படி இருக்கும், விலை அதிகரிக்குமா? குறையுமா? அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது போன்ற முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது, மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது எனலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications