1. All India Bank Officer's Confederation, The 2. All India Bank Officer's Association,
3. The Indian National Bank Officer's Congress 4. The National Organisation of Bank Officers ஆகிய நான்கு வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வரும் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருக்கிறார்கள்.
செப்டம்பர் 26 & 27 ஆகிய இரண்டு வேலை நிறுத்த நாள் போக, 28-ம் தேதி செப்டம்பர் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை. அதன் பிறகு வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை. எனவே 25-ம் தேதிக்குள்ளேயே மக்கள் தங்களுக்கான வங்கி வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த வங்கி இணைப்பு, தனியார் வங்கிகளுக்கு, இந்திய வங்கிச் சந்தையில் ஒரு இடத்தைக் கொடுத்து விடும். இது மக்களுக்கு எதிரானது எனச் சொல்லி இருக்கிறார்கள் அனைத்து இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் அமைப்பு. அதோடு இந்த வங்கிகள் இணைப்பு நடவடிக்கை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை எனவும் விமர்சித்து இருக்கிறார்கள்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 30, 2019 முதல் அரசு வங்கிகளை இணைக்கும் திட்டம் வெளியானதில் இருந்தே, பொது மக்கள் தொடங்கி வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் வரை பல தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் அனைத்து இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் அமைப்பினர்கள். இந்த செப்டம்பர் 26 & 27 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடத்திய பின்பும் அரசு, வங்கி அதிகாரிகள் சங்கத்தினர்களுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் சொல்லப்பட்டு இருப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
ஏற்கனவே இரண்டு முறை அரசு வங்கிகள் இணைத்து இருக்கிறார்கள். அதில் இருந்து எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை, குறிப்பாக வாராக் கடன்கள் குறையவே இல்லை எனவும் சுட்டிக் காட்டுகிறது அனைத்து இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் அமைப்பு. நம் நாட்டு விவசாய பெருமக்களுக்கு, வங்கி சேவைகளை வழங்க பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது அவர்களின் கிராமங்களில் ஒரு வங்கிக் கிளை வேண்டுமா..? எனவும் அழுத்தமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள் AITUC அமைப்பினர்கள்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications