டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் பயணிக்க இன்று முதல் பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறது இந்திய ரயில்வேஸ்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் அருமையான திட்டமிடல் மற்றும் தொலைநோக்கு பார்வையால் இந்திய ரயில்வே எனும் மிகப் பெரிய பொதுச் சொத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் வேலை தொடங்கியது.
இந்த தனியார்மயத்தின் முதல் அடையாளமாக டெல்லி முதல் லக்னெள வரை பயணிக்கும் தேஜாஸ் அதிவிரைவு ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
முதல் முறை
இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக சில தனியார் நிறுவன உதவி உடன், ஐ ஆர் சி டி சி மட்டுமே தனியாக இயக்க இருக்கும் முதல் ரயில் இது தானாம். டெல்லி முதல் லக்னெள வரைக்குமான பயண தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடத்தில் கடக்குமாம். வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இந்த ரயில் ஓடும். லக்னெள முதல் டெல்லி வரை செல்லும் தேஜாஸ் ரயிலில், சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 1,125 ரூபாய். எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 2,310 ரூபாயாம்.
விலை அதிகம்
டெல்லி முதல் லக்னெள வரை செல்லும் தேஜாஸ் ரயிலில், சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 1,280 ரூபாய், எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 2,450 ரூபாயாம். அதெப்படி..? லக்னெள முதல் டெல்லி வரைக்கும் வர ஒரு கட்டணம் என்றால் அதே கட்டணம் தானே டெல்லியில் இருந்து லக்னெள வருவதற்கும் ஆக வேண்டும்..? ஏன் மாறுபடுகிறது..? என்று கேட்டால் flexi-fare scheme என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
ஆன்லைன் டிராவல் போர்டல்
இந்த தேஜாஸ் ரயில் பயணச் சீட்டை முன் பதிவு செய்ய, ஐ ஆர் சி டி சி வலைதளத்திலோ அல்லது ஐ ஆர் சி டி சி செல்ஃபோன் செயலி வழியாகவோ முன் பதிவு செய்து கொள்ள முடியும். ரயில் நிலைய கவுண்டர்களில் முன் பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக டெல்லி முதல் லக்னெள வரை செல்லும் தேஜாஸ் ரயிலின் பயணச் சீட்டுகளை பேடிஎம், போன்பே, மேக் மை ட்ரிப், ஐபிபோ, ரயில் யாத்ரி போன்ற ஆன்லைன் டிராவல் போர்டல்களிலும் முன் பதிவு செய்து கொள்ளலாம். பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பில் இருந்தே முன் பதிவு தொடங்குமாம்.
சலுகைகள் இல்லை
மூத்த குடிமக்களுக்கான விலைச் சலுகை, , ரயில்வே ஊழியர்களுக்கான பாஸை வைத்து பயணிப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை என எந்த ஒரு ரயில்வே சலுகையும் இந்த தனியார் ரயிலில் செல்லுபடியாகாது. எல்லோரும் முழு கட்டணம் செலுத்தித் தான் பயணிக்க வேண்டுமாம். இதை விட கொடுமை என்ன தெரியுமா..? 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கூட முழு கட்டணம் தானாம். தற்போது நடைமுறையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயிலில் அரை டிக்கெட் தான் கொடுத்து வருகிறார்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications