டெல்லி: இந்தியாவில் மாநில, கலாச்சார வேறுபாடுகள் இல்லாமல், சுமார் 95 சதவிகிதம் பேர் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் ஒரு காய்கறி என்றால் அது வெங்காயம் தான். சின்ன வெங்காயமோ பெரிய வெங்காயமோ, இந்தியாவில் பெரிய அளவில் பல தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த சில வார காலமாக வெங்காயத்தின் விலை விண்னைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. கிலோ 20 ரூபாய், 30 ரூபாய் விற்பனை ஆகி வந்த வெங்காயம் கடந்த சில வாரங்களாக 80 ரூபாய்க்கு மேல் எல்லாம் அசால்டாக விற்பனையாகி வருகிறது.
இன்று (செப்டம்பர் 29, 2019 ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்தியாவில் இருந்து, எந்த வகையான வெங்காயமும் ஏற்றுமதி செய்யப்படக் கூடாது என மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் இன்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த அறிக்கையை வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநர் அலோக் வர்தன் சதுர்வேதி வெளியிட்டு இருக்கிறார்.
மேலும், இந்த சிக்கலைத் தீர்க்க மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் வெங்காயத்தை வாங்கி மாநில மக்களுக்குத் தேவையான வெங்காயத்தைச் சப்ளை செய்யுமாறு சொன்னார் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுக்க வெங்காய சப்ளை பிரச்னையை சரி செய்ய, இரண்டு துணைச் செயலர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பி இருக்கிறார்களாம். இவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், வெங்காயத்தை போக்குவரத்து செய்யும் லாரி உரிமையாளர்கள் என பல தரப்பினரிடமும் பேசி வெங்காய சப்ளை எப்படி இருக்கிறது என மதிப்பிட இருக்கிறார்களாம். அதோடு அனைத்து தரப்பினரையும் அதிகம் வெங்காயத்தைக் கொண்டு வரவும் வலியுறுத்திச் சொல்ல இருக்கிறார்களாம்.
சமீபத்தில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடைய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்கினார். ஆனால் இப்போது சுமாராக 600 மில்லியன் டாலர் வரை ஏற்றுமதி ஆகும் வெங்காயம் மற்றும் அதன் சார்ந்த, ஏற்றுமதிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. என்ன செய்ய ஒரு பக்கம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் இன்னொரு பக்கம், வெங்காயத்தைன் விலையையும் கட்டுப்படுத்த வேண்டுமே..!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications