மும்பை : இந்திய வங்கி முறைகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக மக்களிடையே கருத்துகள் நிலவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம், இந்திய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து நிலையானதாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் விரைவில் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் குறித்த விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து அரசுடன் ஆலோசனை நடத்தப்போவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய தாஸ், கூட்டுறவு வங்கிகளின் பராமரிப்பு பற்றிய கேள்விகளுக்கு ஆர்பிஐ எந்த கூட்டுறவு வங்கியும் நிலைகுலைவதை அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் சிறந்த கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகத் திகழும் பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்திருப்பது பற்றி கேட்டபோது, இதைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும், மேலும் பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரனை நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். இது தவிர கூட்டுறவு வங்கிகளின் பராமரிப்பு சிறப்பாகவே உள்ளது என்றும், ஒரு சம்பவத்தை வைத்து, மற்ற அனைத்து கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளையும் குறை கூறிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஆர்பிஐ கூட்டுறவு வங்கிகளின் அனைத்து விதிமுறைகளையும் மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் அரசுடனும் கலந்தாலோசிப்போம் எனவும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிதித்துறை விவகாரங்கள் பற்றி கேட்டபோது, தற்போது வரை ரிசர்வ் வங்கி கவனமாகவே இருந்து வருகிறது என்றும், வங்கி அமைப்பு சிறப்பாகவும் நிலைத்தன்மையோடும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அச்சப்படுவதற்கான காரணமே இதில் இல்லை எனவும் வதந்திகளை அறிந்து, யாரும் பயப்பட வேண்டும் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த தேவையற்ற வதந்திகள் பீதியை உண்டாக்கும் என்றும், அவை குறித்து யாரும் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பி.எம்.சி வங்கி, முறைகேடு செய்யப்பட்டதாக தெரிந்த நிலையில், ரிசர்வ் வங்கி மிக விரைவாகவும், உடனடியாகவும் செயல்பட்டதாகவும் தாஸ் கூறியுள்ளார். தற்போது பி.எம்.சி வங்கியில் பணம் எடுக்கும் வரம்பை தற்போது 25,000 ரூபாயாக அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications