இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 84.5 மில்லியன் பேராக அதிகரித்து இருக்கிறார்களாம். இது 2017 - 18 நிதி ஆண்டுக்கான தரவுகள். 2017 - 18 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு 2018 - 19 நிதி ஆண்டில் தான் வருமான வரி செலுத்துவார்கள்.
எனவே அதற்கு முந்தைய 2016 - 17 நிதி ஆண்டுக்கான தரவுகளோடு இந்த எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 13.8 சதவிகிதம் பேர் கூடுதலாக இந்த முறை தங்கள் வருமான வரிப் படிவங்களை முறையாகச் செலுத்தி இருக்கிறார்களாம்.

2016 - 17 நிதியாண்டில் சம்பாதித்த பணத்திற்கு 2017 - 18 நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தினார்கள். அப்போது 74.2 மில்லியன் பேர் வருமான வரிப் படிவங்களை முறையாக தாக்கல் செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கையில் இருக்கும் தரவுகளின்படி 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி, அமல்படுத்தப்பட்ட பின், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மற்றும் வருமான வரி வருவாய் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள்.
தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது மற்றும் வருமான வரிச் சட்டங்கள் வழியாக வருமான வரி படிவங்களை முறையாக செலுத்த பொருளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்றவைகளால் மத்திய அரசுக்கு வரும் நேரடி வரி வருவாய் அதிகரித்து இருப்பதாக சொல்கிறார்கள் அதிகாரிகள். அதோடு துறை சார் வல்லுனர்களும் நேரடி வரி வருவாய் அதிகரிப்பதற்கு மறைமுக வரி வசூலில் கொண்டு வந்த சீர்திருத்தங்களும் ஒரு முக்கிய காரணம் எனச் சொல்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த தரவுகளில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு முறையாக அரசுக்கு வருமான வரி படிவங்களை சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் முறையாக அரசுக்கு வருமான வரி படிவங்களை சமர்ப்பித்தவர்கள் என இரண்டு தரப்பினரையும், வரி செலுத்தியவர்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு கணக்கிட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக தொடர்ந்து நேரடி வருமான வரி மூலமாக அரசுக்கு வரும் வருவாய் இரட்டை இலக்கங்களில் வளர்ச்சி கண்டு வருகிறதாம். கடந்த 2017 - 18 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் வளர்ச்சி 18 சதவிகிதமாக இருந்தது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இதே நேரடி வரி வருவாய் வளர்ச்சி வெறும் 13.5 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. இதற்கு காரணமாக உலகப் பொருளாதார மந்தநிலை மற்றும் உள்நாட்டில் சேவை மற்றும் நுகர்வு குறைவு போன்றவைகளை சொல்கிறார்கள்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications