மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதே, சிலர் முறைகேடு புகார் கொடுத்து இருந்தார்கள். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் முதன்மை நிதி அதிகாரி ஆகியோர்கள் அழுத்தம் கொடுத்து கணக்கு வழக்குகளை மாற்றி எழுதி, நிறுவனத்தின் லாபத்தை உயர்த்திக் காட்டுகிறார்கள் என்பது தான் புகார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவின் பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (US Securities and Exchange Commission) தன் விசாரணையைத் தொடங்கி இருக்கிறதாம்.

"இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது புகார் எழுந்த போதிலிருந்தே, அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது எழுந்த புகாருக்கு, தன் தரப்பில் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்" என இன்ஃபோசிஸ் நிறுவன தரப்பே முன் வந்து சொல்லி இருக்கிறார்கள். அதோடு, இன்ஃபோசிஸ் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் சொல்லி இருக்கிறது இன்ஃபோசிஸ்.
அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதான புகார் தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டிருக்கிறார்களாம். செபி அமைப்பு கேட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் முறையாக கொடுக்க இருப்பதையும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறார்களாம்.
இதெல்லாம் போக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், அமெரிக்க நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதும், தங்களுக்கு தெரியும் என இன்ஃபோசிஸ் தரப்பு வெளியிட்ட ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறார்கள். இந்த வழக்கை இன்ஃபோசிஸ் நிறுவனம் கடுமையாக எதிர் கொள்ள இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு என்ன கெட்ட காலமோ தெரியவில்லை. வந்த ஒரு முறைகேடு புகாரினால் அடுத்து அடுத்து பிரச்னைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. எல்லா வழக்குகள் மற்றும் விசாரணைகளில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு, தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது இன்ஃபோசிஸ்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications