டெல்லி: சமீபத்தில் தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு பெரிய வழக்கில் சிக்கி சுமார் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு எல்லாம் செலுத்தச் சொன்னது நீதிமன்றம். இப்போது மீண்டும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரில் கேன்சர் நோயை வரவைக்கும், சில ரசாயனங்கள் இருப்பதாகச் சொல்லி அமெரிக்க அரசும், இந்திய அரசும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன விசாரணையில் களம் இறங்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பேட்ச்சில் இருக்கும் டால்கம் பவுடர்களில் "chrysotile asbestos" என்கிற கேன்சர் நோயை வரவழைக்கக் கூடிய ரசாயனங்கள் 0.00002 சதவிகிதம் கலந்து இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையான எஃப் டி ஏ (FDA - Food and Drug Administrator) கண்டு பிடித்தது. எனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தன்னுடைய அந்த குறிப்பிட்ட பேட்ச் டால்கம் பவுடர்களை திரும்ப அழைத்து இருக்கிறது.

அமெரிக்காவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களில் ஏற்பட்ட இந்த சிக்கலை கருத்தில் கொண்டு இந்தியாவில் மருந்துகளை நெறிமுறைப்படுத்தும் ஆணையமும் களத்தில் இறங்க இருக்கிறதாம். அதாவது ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர்களில் உண்மையாகவே கேன்சர் நோயை வரவழைக்கும் ரசாயனங்கள் இருக்கிறதா என விசாரிக்கப் போகிறார்களாம். இதற்கு அமெரிக்காவின் எஃப் டி ஏ அமைப்பின் உதவியையும் நாடி இருக்கிறார்களாம்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் இந்த டால்கம் பவுடர் பாதுகாப்பானது தானா..? போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வைத்திருக்கிறதா..? என உறுதி செய்து கொள்ள மத்திய சுகாதாரத் துறை விரும்புகிறதாம். இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களைக் குறித்து விசாரிக்க இருப்பதாக ஒரு துறை சார்ந்த உயர் அதிகாரியும் சொல்லி இருக்கிறாராம்.
இதுவரை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்த டால்கம் பவுடர் சிக்கலைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்பதையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களில் ethylene oxide என்கிற கேன்சரை வரவழைக்கும் ரசாயனங்களைக் கொண்டு ஸ்டெர்லைஸ் செய்ததற்கான உரிமங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதன் பின், அரசு தரப்பை எதிர்த்து நீதிமன்றங்களில் போராடி தான், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், மீண்டும் தன் டால்கம் பவுடர்களைத் தயாரிக்க அனுமதி வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications