மத்திய அரசுக்கான நிதி நிலை, 2019 - 20 நிதி ஆண்டு முடியும் தருவாயிலேயே அத்தனை வலுவாக இல்லை.
2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் 30.42 லட்சம் கோடி ரூபாயை செலவழிக்க இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அதில் 20.2 லட்சம் கோடி ரூபாயைத் தான் வரி வருவாய்கள் வழியாக ஈட்ட இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள்.
அதில் 7.96 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்க இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள். மீதமுள்ள, வருவாய் பற்றாக்குறையை சரிகட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசின் சொத்து பத்துக்களை விற்று ஈட்ட இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள்.
கொரோனா வைரஸ்
யாரும் எதிர்பார்க்காத வகையில், உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி, எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிட்டது. இந்தியா மட்டும் இன்றி எல்லா உலக நாடுகளும் திட்டமிட்ட படி, தங்கள் வேலைகளைச் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இந்தியாவின் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை வேலைகளும் இதனால் கொஞ்சம் தொய்வடைந்தது எனலாம்.
கேபினெட் அனுமதி
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் 23 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க, ஏற்கனவே மத்திய அரசின் கேபினெட் அமைச்சரவை அனுமதி கொடுத்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. இப்போது, இந்த 23 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் வேலைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே சொல்லி இருக்கிறார்.
2.1 லட்சம் கோடி கணக்கு
2020 - 21 நிதி ஆண்டில், மொத்தம் 2.1 லட்சம் கோடி ரூபாயை, அரசு தன் சொத்து பத்துக்களை விற்று திரட்ட இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள். அதில் 1.2 லட்சம் கோடி ரூபாயை, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ஈட்டப் போகிறார்களாம். மீதமுள்ள 90,000 கோடி ரூபாயை நிதி நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்று திரட்டப் போகிறார்களாம்.
என் பி எஃப் சி உடன் சந்திப்பு
அதோடு, இந்தியாவின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என் பி எஃப் சி) மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் போன்றவர்களையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் சந்திக்க இருக்கிறாராம். இந்த சந்திப்பில், இந்திய வியாபாரிகளுக்கு, இந்த நிதி நிறுவனங்கள், எவ்வளவு கடன் வழங்கி இருக்கிறார்கள் என்பதை பரிசீலனை செய்ய இருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications