இந்திய வங்கிகளில் அதிகளவிலான கடன்களைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் இந்திய வங்கிகளையும், அரசையும் ஏமாற்றி இந்தியாவை விட்டு வெளியேறிய மோசடியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து எழுந்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சரான அனுரங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
கடந்த 5 வருடத்தில் இந்திய வங்கிகளை ஏமாற்றி விட்டு எத்தனை பேர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி உள்ளனர் என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் உள்ளதா எனச் சட்ட அதிகாரி Dean Kuriakose கேள்விகேட்ட நிலையில், இதற்கு நாடாளுமன்றத்தில் அனுரங் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
38 பேர்
ஜனவரி 1, 2015 முதல் டிசம்பர் 12, 2019 வரையிலான 5 வருட காலத்தில் நிதி மோசடிகளைச் செய்து இந்தியாவை விட்டு சுமார் 38 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியுள்ளனர் எனச் சிபிஐ தெரிவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சரான அனுரங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
ரெட் கார்னர் நோட்டீஸ்
இதோடு சிபிஐ மற்றும் மத்திய அரசு இணைந்து இண்டர்போல் அமைப்பை நாடி நிதி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பியோடியுள்ள 38 மோசடியாளர்களில் 20 பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பபட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். மீதமுள்ள 18 பேரின் நிதி மோசடிகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சிபிஐ எடுக்கத் துவங்கியுள்ளது என அனுரங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தல்
இந்த 38 பேரும் அயல்நாட்டில் குடியுரிமை பெற்றுத் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அவர்களைத் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதில் பலகட்ட நடவடிக்கைகள் அடங்கியுள்ளதாகவும், ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 20 பேரில் 14 பேருக்கு குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்புவிப்பு கோரிக்கையைப் பல்வேறு நாடுகளிடம் இந்திய அரசு கோரியுள்ளது.
இதில் 11 பேர் மீது Fugitive Economic Offenders Act, 2018 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனுரங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தடுப்பு நடவடிக்கை
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் பெரிய அளவிலான தொகையை மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் மத்திய அரசு நிதி மோசடியாளர்களை நாட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
50 கோடி ரூபாய்
இந்தத் தடுப்பு நடவடிக்கையாக 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய கடன்களைப் பெற்ற தனிநபர், நிறுவனத் தலைவர், நிர்வாகத் தலைவர்கள், பிற நிர்வாக அதிகாரிகளின் ஆகியோரின் பாஸ்போர்ட் நகழ்களை கட்டாயம் பெற வேண்டும் எனப் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5 வருடத்தில் 38 பேர் நிதி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பித்து ஓடியுள்ளனர், இதைப் பற்றி மக்களாகிய நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்பதைக் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications