மொட்டை மாடியில் ரூப்டாப் சோலார் பேனல்களை நிறுவ விரும்புவோர், மத்திய அரசின் 40% மானியத்தை நேரடியாகப் பெற முடியும்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) தேசிய போர்ட்டலில் roof solar (solarrooftoppanel.gov.in) இல் ரூப்டாப் சோலார் பேனல்களுக்கு விண்ணப்பிக்க நுகர்வோர் தங்கள் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
MNRE விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டவுடன், மானியம் நுகர்வோரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
சோலார் பேனல்
சோலார் பேனல் நிறுவலுக்கு (installation) முதலில் மக்கள் ல்லது நிறுவனங்கள் முதலில் TEDA அல்லது Tangedco அமைப்புகளைத் தான் அணுக வேண்டும், அதன் பிறகு TEDA மையத்திலிருந்து மானியம் (3 kW வரை) பெற்று விண்ணப்பதாரர்களுக்கு விநியோகிக்கும் எனத் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்சி-யின் (TEDA) மூத்த அதிகாரி ஐஇ பத்திரிக்கைக்குத் தெரிவித்தார்.
புதிய அமைப்பு
ஆனால் தற்போது புதிய அமைப்பின் கீழ், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) தான் நிறுவலுக்கான (installation) நுகர்வோரின் விவரங்களை TEDA-வுக்குத் தெரிவிக்கும் என்று TEDA) மூத்த அதிகாரி கூறினார்.
40 சதவீதம் மானியம்
மத்திய அரசு ரூப்டாப் சோலார் மானியத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 3 கிலோவாட் சோலார் பேனல்களுக்குக் கீழ் 40 சதவீதம் வரையில் மானியம் பெறலாம் முடியும். இது சாமானிய மற்றும் நடுத்தர வீடுகளுக்கும் பெரிய அளவில் பயன்படும்.
மானிய விபரங்கள்
இதேபோல் 3-10 கிலோவாட் சோலார் பேனல்களுக்கு 20% மானியம் பெறலாம், இதேபோல் குரூப் ஹவுசிங் சொசைட்டி மற்றும் குடியிருப்பு நலன்புரி சங்கங்கள் பொதுவான பயன்பாட்டுக்கான சோலார் பேனல்களைக் கொண்டு இருக்கும் வேளையில் 500 கிலோவாட் (ஒரு வீட்டிற்கு 10 கிலோவாட்) வரையிலான திட்டத்திற்கு 20% மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
3 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்
மாநிலத்தில் சோவார் ரூப்டாப் பேனல்களை நிறுவ பலர் விரும்பினாலும், தமிழகத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் நிறுவனங்கள் மட்டுமே உள்ளதால் ஒன்றை நிறுவ குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனக் கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் செயலர் என் லோகு ஐஇ பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்சி
மாநிலத்தில் இன்னும் சில சோலார் பேனல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்சி-யின் (TEDA)-க்கு வலியுறுத்தி வருகின்றனர். மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவோம் என்று TEDA அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications