உலகளவில் அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் இயந்திரங்கள் மற்றும் டெக்னாலஜியின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்களின் அவசியமும், தேவைகளும் பல இடத்தில் குறைந்து வருகிறது.
இந்நிலையில் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2025ஆம் ஆண்டுக்குள் உலகளவில் மனிதர்களும், இயந்திரங்களும் சமமாக இயங்கும் அளவிற்கு நிலை மாறும். அப்போது 10ல் 6 பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என இந்த அறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வறிக்கை உலகின் மிகப்பெரிய கண்சல்டிங் சேவை நிறுவனமான PWC சுமார் 19 நாடுகளில் 32,000 ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வில் பங்குபெற்ற 40 சதவீதம் பேர் அடுத்த 5 வருடத்தில் தங்கள் வேலை இழக்க நேரிடம் எனத் தெரிவித்துள்ளனர், சுமார் 56 சதவீதம் பேர் தற்போது இருக்கும் வேலையில் நீண்ட காலம் சிலர் மட்டுமே பணியாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
60 சதவீதம் பேர் அரசு தங்களது வேலையைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் 40 சதவீதம் பேர் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் நேரத்தில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 80 சதவீதம் பேர் புதிய தொழில்நுட்பம் அல்லது திறன்களைத் தெரிந்துகொள்ளவும், புதிய துறையில் பணியாற்றவும் தயார் எனத் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளும், நிறுவனங்களும் தற்போது குறிப்பாகக் கொரோனா லாக்டவுனுக்குப் பின்பு இயந்திரங்களையும், செயற்கை நுண்ணறிவு அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் சுமார் 8.5 கோடி மக்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
இதேவேளையில் புதிய தொழில்நுட்பம், புதிய வர்த்தக முறை ஆகியவை உருவாகியிருக்கும் நிலையில் புதிதாக 9.7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications