உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் முக்கிய நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் சம்பளத்தை குறைத்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்தது என்பதும் இது குறித்த அறிவிப்புகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காக்னிசன்ட்
இந்த நிலையில் அடுத்ததாக உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் தனது ஊழியர்களுக்கு சராசரியாக 10 சதவீதம் வரை சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
நியூஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் அதன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை இமெயில் மூலம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
70% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் தங்களது 70 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் 30 சதவீத ஊழியர்களுக்கு அவர்களுடைய செயல்பாட்டின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விப்ரோ
அதேபோல் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் தியரி டெலாபோர்ட் அவர்கள் 2023 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 85 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர்களுக்கு தானாகவே சம்பளம் உயர்ந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐடி நிறுவனங்கள்
இந்த நிலையில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களை தொடர்ந்து தற்போது காக்னிசன்ட் நிறுவனமும் தங்களது ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளித்துள்ளதால் ஐடி துறை முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications