ஜால்னா, மகாராஷ்டிரா: பொதுவாக ஏடிஎம் இயந்திரத்தை குறி வைக்கும் கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணத்தை திருடிச் செல்வார்கள் அல்லது ஏடிஎம் இயந்திரத்தையே மொத்தமாக திருடிச் செல்வார்கள். ஆனால் இங்கு மகாராஷ்டிராவின், ஜால்னா மாவட்டத்தில், ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணப் பெட்டியை மட்டும் திருடிச் சென்று இருக்கிறார்கள் கொள்ளையர்கள்.
மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் நுதன் வசஹத் பகுதியில் இருக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில், கடந்த திங்கள் அன்று இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது. ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் இந்த பணப் பெட்டியை உடைத்து பணத்தை மட்டுமே திருடிச் செல்ல முயன்று இருக்கிறார்கள் கொள்ளையர்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் பணத்தை மட்டும் கொள்ளை அடித்துக் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணப் பெட்டியை மட்டும் திருடிச் சென்று இருக்கிறார்கள்.

கொள்ளையர்கள் இத்தனை ரிஸ்க் எடுத்து திருடிச் சென்ற ஏடிஎம் பணப் பெட்டியில் வெறும் 13,000 தான் பணம் இருந்ததாக காதி ஜால்னா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் தேவிடாஸ் ஷேல்கே சொல்லி இருக்கிறார்.
ஏடிஎம் இயந்திரத்துக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில், கொள்ளையர்கள் கொள்ளை அடித்த முழு வீடியோவும் பதிவாகி இருக்கிறதாம். இந்த வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, காவல் துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்களாம்.
இதுவரை பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் ஏடிஎம் இயந்திரங்களில், கொள்ளை அடித்த திருடர்களைப் பற்றிய எந்த ஒரு அடையாளமும் கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.
நல்ல வேளையாக கொள்ளை அடித்த பணம் வெறும் 13,000 என்பதால் வங்கிக்கும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திருக்கும். இதுவே லட்சக் கணக்கில் பறி போய் இருந்தால், வங்கிக்கு தான் தலைவலி அதிகரித்து இருக்கும். இப்படி வங்கிகளில் இருப்பது, நம்மை போன்ற சாதாரண மக்களின் பணம் தானே. இனியும் இப்படிப்பட்ட ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருந்தால் சரி. நடக்காமல் இருக்கும் என நம்புவோம். வங்கிகள் இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கட்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications