நம் வாழ் நாளில் இப்படி ஒரு செய்தியினை இதுவரை கேள்விப்பட்டிருக்கவும் முடியாது. இனி இதுபோன்ற மதிப்பீடுகள் வருமா? என்பதும் சந்தேகம் தான்.
அப்படி என்ன செய்தி என்று தானே கேட்கிறீர்கள். இதுவரை இல்லாத அளவு இந்தியாவின் வளர்ச்சியினை முதன் முறையாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் பூஜ்ஜியமாக கணித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சியினை பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.
ஜிடிபி வளர்ச்சி குறைப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் காலாண்டர் ஆண்டு 2020ல் பூஜ்ஜியமாகத் தான் இருக்கும் என்று கணித்துள்ளது பார்க்லேஸ். இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான பார்க்லேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினை 2.5%ல் இருந்து 0% ஆக குறையும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் நீட்டிப்பு
இதே 2020 - 2021ம் நிதியாண்டிற்கான வளர்ச்சியினை 3.5%ல் இருந்து 0.8% ஆகவும் குறைத்துள்ளது பார்க்லேஸ். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மேற்கொண்டு கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க, நீண்ட ஊரடங்கிற்கு பிறகு, இன்று இரண்டாவது முறையாக மே 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பொருளாதார இழப்பு
இந்த லாக்டவுன் காரணமாக பல சேவைத் துறைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்திய ஜிடிபியில் பெரும் இழப்பு ஏற்படலாம் என்றும், குறிப்பாக 243.4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு, அதாவது ஜிடிபியில் 8.1% பாதிப்பு ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் இழப்பு
ஏற்கனவே 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் பெரும் இழப்பினை சந்தித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் உயிரை காப்பாற்ற நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், இதனால் பொருளாதார ரீதியில் இந்தியா பெரும் இழப்பினை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
லாக்டவுன் நீட்டிக்கப்படலாம்
மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு கொரோனாவின் தாக்கம் குறையும் பகுதிகளில் ஊரடங்குக்கு சற்று தளர்வு அளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். ஆனால் இந்த ஊரடங்கானது ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பிறகு ஒரு சுமாரான திருத்தம் வரலாம் என்றும் பார்க்லேஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் தற்போது தான் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி தான் அடையும் எனவும் பார்க்லேஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications