பொதுத் துறை நிறுவனங்களை விற்று நிதி வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு, 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலேயே 2.1 லட்சம் கோடி ரூபாயை இலக்காக நிர்ணயித்து இருக்கிறது.
சுமாராக 23 அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய கேபினெட் அமைச்சகம் சமீபத்தில் அனுமதி கொடுத்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
சரி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தனியார்மயம் செய்திக்கு வருவோம். இந்த கம்பெனியை வரும் மார்ச் 2021-ம் ஆண்டுக்குள் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவு அடையலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பாரத் பெட்ரோலியம்
இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 12,500 கோடி ரூபாயை முதலீட்டுச் செலவுகளாகச் (Capital Expenditure) செய்ய இருந்தது பாரத் பெட்ரோலியம். ஆனால் தற்போது கொரோனா பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால், பாரத் பெட்ரோலியம் தன் முதலீட்டுச் செலவுகளை 8,000 கோடி ரூபாயாக குறைத்து இருக்கிறார்களாம்.
விற்பனை எப்படி
கடந்த ஆகஸ்ட் 2019-ம் கால கட்டத்தில், எவ்வளவு எரிபொருள் விற்பனை ஆனதோ, அதில் 90 % வரை, இந்த ஆகஸ்ட் 2020-ல் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறதாம். ஆக எரிபொருட்களுக்கான டிமாண்ட் ஏறத் தாழ பழைய நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த தரவுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
விரிவாக்கம்
பாரத் பெட்ரோலியம் கார்பப்ரேஷன் கம்பெனியை, தனியார்மயமாக்க அரசு வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட, 2020 - 21 நிதி ஆண்டுக்குள், இந்தியாவில் புதிதாக 1,000 பெட்ரோல் பங்குகளை நிறுவ திட்டம் போட்டுக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நிகர லாபம்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கம்பெனியின் ஏப்ரல் 2020 - ஜூன் 2020 வரையான கால கட்டத்தில், ஸ்டாண்டலோன் (Standalone) நிகர லாபம் 2,076 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஜூன் 2019 காலாண்டில் 1,075 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Refining margin
ஜூன் 2020 காலாண்டில், ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து எரிபொருளாக மாற்றினால் பேரலுக்கு 0.39 அமெரிக்க டாலர் தான் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஈட்டுகிறதாம். ஆனால் கடந்த ஜூன் 2019 காலாண்டில் 2.81 அமெரிக்க டாலர் ஈட்டியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications