இந்திய இன்சூரன்சர்ஸ் கட்டுப்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ அமைப்பு நாட்டின் இரு முக்கியத் தனியார் இன்சூரன்ஸ் சேவை நிறுவனங்களான பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் இணைக்க முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் மூலம் ஐசிஐசிஐ லோம்பார்ட் அடுத்தகட்ட பணியாகப் பிற அரசு அமைப்புகளிடம் தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது எனப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது ஐசிஐசிஐ லோம்பார்ட்.

இந்த இணைப்பிற்கு அனைத்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஆயுள் காப்பீடு அல்லாத வர்த்தகச் சந்தையில் பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் கூட்டணி நிறுவனத்தின் சந்தை அளவீடு 8.7 சதவீதமாக உயரும்.
இதுமட்டும் அல்லாமல் இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு இருதரப்பு பங்கு முதலீட்டாளர்களுக்கும் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் வருமானம் மற்றும் இயக்க திட்டங்களைப் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
இதோடு வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிப்பது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் மக்களை எளிதாகச் சென்றடைந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். இதனால் நாடு முழுவதிலும் இருக்கும் மக்களுக்குத் தன் நிறுவன சேவைகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதைக் கூட்டணி பெரிய அளவில் நம்புகிறது.
பார்தி AXA ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பார்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், பிரான்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனமான AXA 49 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் இணைப்பிற்குப் பின் பார்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் மற்றும் AXA ஆகிய நிறுவனங்கள் பொதுச் சந்தை முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள் எனவும், இக்கூட்டணி நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஐசிஐசிஐ லோம்பார்ட் அதிக ஆதிக்கத்தைச் செலுத்தும் எனவும் தெரிகிறது.
பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைக்க ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்ட நிலையில், நவம்பர் மாத துவக்கத்தில் CCI அமைப்பு இந்நிறுவன கைப்பற்றலுக்கு ஒப்புதல் அளித்தது, தற்போது IRDAI அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இவ்விரு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைப்பிற்கு மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications