டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையில் இந்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகின்றது. பல்வேறு அறிவிப்புகளையும் கொடுத்து வருகின்றது. பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை உட்புகுத்தி வருகின்றது.
குறிப்பாக பட்ஜெட் 2022 தாக்கல் செய்த 1.5 மணி நேர அறிக்கையில், டிஜிட்டல் என்ற வார்த்தை 35 முறையும், டெக் என்ற வார்த்தையை 26 முறையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தினார்.
அந்தளவுக்கு டிஜிட்டல்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது இந்திய அரசு.
மிகப்பெரிய வாய்ப்புகள்
பட்ஜெட்டில் பேசிய நிதியமைச்சர் டிஜிட்டல் பொருளாதாரம், ஃபின்டெக், டெக்னாலஜி டெவலப்மெண்ட் உள்ளிட்ட மூன்றும் முக்கிய இலக்காக அரசு கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன.
கல்வி, சுகாதாரம், விவசாயம், வங்கி, பணம் செலுத்துதல் மற்றும் அரசாங்க கொள்முதல் மற்றும் பேமெண்ட்களுக்கும் புதிய முதலீடுகள் என்பது டிஜிட்டல்மயமாக்கலுக்கு முதுகெலும்பாக இருக்கும் என டெலாய்ட் இந்தியாவின் இந்திய பார்ட்னர் பிஎன் சுதர்சன் கூறியுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம்
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கான உத்வேகத்தினை பட்ஜெட் 2022 கொடுத்துள்ளது என KPMG பார்ட்னர் மற்றும் தலைவர் (டிஜிட்டல் கன்சல்டிங்) அகிலேஷ் துடேஜா கூறியுள்ளார்.
மேலும் இ-பாஸ்போர்ட் ஒரு டிஜிட்டல் சொத்து. ட்ரோன்கள் இன்னும் தொழில் நுட்பத்தினை மேம்படுத்தும். இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கூடும் என கூறியுள்ளார்.
மைண்ட் ட்ரீ
மைண்ட் ட்ரீ தலைமை நிர்வாக அதிகாரி டெபாசிஷ் சாட்டர்ஜி, டேட்டா சென்டர்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்துகளை வழங்குவது, இந்தியாவினை ஊக்குவிக்கும். மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சிகள், இ-பாஸ்போர்ட் போன்ற சேவைகள் ஐடி துறைக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபி நாதன் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி முய்ற்சியானது, எதிர்காலத்திற்கானது என கூறியுள்ளார்.
பொதுவாகவே கொரோனாவின் வருகைக்கு பிறகு மக்கள் டிஜிட்டல் தேவையின் அவசியத்தினை உணர்ந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது வணிக்கத்தினை மேம்படுத்த டிஜிட்டல் பயன்பாட்டினை அதிகரித்து வருகின்றனர். ஆஃப் லைன் வணிகம் என்பது இருந்தாலும், ஆன்லைனிலும் புரோமோட் செய்கின்றனர். கொரோனாவுக்கு பிறகும் இந்த போக்கானது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications