கடந்த 18 மாதத்தில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும், உலக நிதியியல் சந்தையும் ஒரு வித்தியாசமான பிரச்சனையைக் கையாள முடியாமல் தவித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் தங்களது சொந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்தே வெளியேற்றப்படுகிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் நிறுவனப் பங்குகளுக்கு எதிராகக் கடன் வாங்கியதும் அதைத் திருப்பிச் செலுத்தாததும் தான்.
இப்படிச் சிக்கிக்கொண்ட, சிக்கிக்கொண்டுள்ள பெரிய தலைகள் யாரென்று இப்போது பார்ப்போம்.
பங்குகளுக்கு எதிராகக் கடன்.. சிக்கிக்கொண்ட பெரிய தலைகள்..!
கடந்த 18 மாதத்தில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும், உலக நிதியியல் சந்தையும் ஒரு வித்தியாசமான பிரச்சனையைக் கையாள முடியாமல் தவித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் தங்களது சொந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்தே வெளியேற்றப்படுகிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் நிறுவனப் பங்குகளுக்கு எதிராகக் கடன் வாங்கியதும் அதைத் திருப்பிச் செலுத்தாததும் தான்.
இப்படிச் சிக்கிக்கொண்ட, சிக்கிக்கொண்டுள்ள பெரிய தலைகள் யாரென்று இப்போது பார்ப்போம்.
பெரிய தலைகள்
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்தா-வின் தற்கொலை, யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர் கடனில் சிக்கிய போது இவ்வங்கி மோசமான நிலையைச் சந்தித்தது, கார்வி பங்கு வர்த்தக நிறுவனத்தின் மோசடிகள் ஆகிய அனைத்திற்கும் ஒரு முக்கியத் தொடர்பு உண்டு.
அது என்னவென்றால் இந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்குகளுக்கு எதிராக வாங்கும் கடனை பயன்படுத்தியும், அதை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தியதும் தான்.
பிரச்சனை
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் நிலவும் மோசமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்கள், முதலாளிகளிடம் ஏற்படும் நிதி நெருக்கடி ஆகியவற்றின் மூலம் முதலாளி அல்லது நிறுவனத் தலைவர்களைப் பங்குகளை அடமானம் வைத்து நிதி திரட்ட தூண்டியது.
இப்படி அடமானம் வைக்கப்பட்ட பணம் கொடுக்கப்பட்ட அமைப்புகள் பெரும்பாலும் மியூச்சுவல் பண்ட் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள். வங்கிகள் கொடுத்துள்ள தொகை மிகவும் குறைவு.
பிரச்சனை உருவாக இது போதாத என்ன..?
முடிவு
இப்பிரச்சனை பெரிதாக வெடிக்க இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட நீண்டகால மந்தநிலையும் முக்கியக் காரணமாக அமைந்தது. அடமானம் வைக்கப்பட்ட நிறுவனங்கள் மீதான மதிப்பும் நம்பிக்கையும் நிதி அமைப்புகளுக்குக் குறைந்த நிலையில் அனைத்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது பங்குகளை விற்பனை செய்து கடனை தீர்க்கும் படி நிதி அமைப்புகள் நெருக்கடி கொடுத்து வருகிறது.
6 பெரிய தலைகள்
தற்போது சுமார் 6 பெரிய நிறுவன தலைகளுக்கு நிதி அமைப்புகள் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறது. இதில் ஜீ எண்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் சந்திரா மற்றும் ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் அனில் அம்பானியும் அடக்கம்.