இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள முதலீடுகள் பொதுவாக 2 காரணத்திற்காகக் குறையும். ஒன்று உள்நாட்டுச் சந்தை மோசமாக இருந்தாலோ அல்லது சரிவை நோக்கிச் சென்றாலோ குறையும். மற்றொன்று இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சரிந்தால் குறையும்.
தற்போது 2 காரணங்களும் ஒன்று சேர்ந்துள்ளதால் இந்தியாவின் அன்னிய செலாவணி எப்போதும் இல்லாத வகையில் 12 வருட சரிவை அடைந்துள்ளது.
கொரோனா ஆரம்பம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே 8 வருட சரிவில் இருந்த நிலையில் அன்னிய செலாவணி கணிசமாகக் குறைந்துகொண்டே வந்த நிலையில், சீனாவில் கொரோனா பிரச்சனை வெடித்தது. இதன் மூலம் சர்வதேசச் சந்தையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவீடுகள் பாதித்தது.
12 வருட சரிவு
இதைத் தொடர்ந்து சீனாவில் மட்டுமே இருந்தே கொரோனா உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவியது. இதனால் சர்வதேச பங்குச்சந்தைகளை மளமளவெனச் சரியத் துவங்கியது. இது போதாத இந்தியாவின் அன்னிய செலாவணி குறைவதற்கான காரணம். இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் அன்னிய செலாவணி 12 வருட சரிவை சந்தித்து.
11.98 பில்லியன் டாலர்
மார்ச் 20 வரையில் முடிந்த வாரத்தில் மட்டும் இந்திய சந்தையில் இருந்து சுமார் 11.98 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் வெளியேறியது. இதே காலகட்டத்தில் தான் ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கையை எடுத்தது.
ஆனால் பன்னாட்டுச் சந்தைகள் தங்களது முதலீட்டை காப்பாற்றும் நோக்கில் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியது.
தடாலடி சரிவு
மார்ச் 20 உடன் முடிந்த வாரத்தில் 11.98 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குறைந்த நிலையில் இந்திய சந்தையில் மொத்த அன்னிய செலாவணி தொகை எப்போதும் இல்லாத வகையில் 469.9 பில்லியன் டாலராகக் குறைந்தது.
இதேபோன்ற சரிவு 2008ஆம் ஆண்டு நடந்த சர்வதேச நிதி நெருக்கடிக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பைப் போலவே உள்ளது.
2008 நிதிநெருக்கடி
அக்டோபர் 24, 2008 முடிந்த வாரத்தில் இந்திய சந்தையில் வரலாறு காணாத விதமாகச் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணி வெளியேறியது.
அப்போது அமெரிக்காவில் பல வங்கி திவாலாகி முடங்கி ஒட்டுமொத்த உலகளாவிய சந்தையும் முடங்கியது. இதேபோன்ற நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications