ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு உலக நாடுகளின் ஆதிக்கம் அளவீட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாகச் சீனா-வின் ஆதிக்கம் மற்றும் நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் FBI மற்றும் பிரிட்டன் MI5 ஒன்றாக இணைந்து முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மட்டும் அல்லாமல் இணைந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளது. சீனாவின் நிலை என்ன..?
சீனா-வால் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு என்ன பிரச்சனை..?
MI5 டைரக்டர்
MI5 டைரக்டர் ஜெனரல் கென் மெக்கலம் பேசுகையில், சீனா சம்பந்தப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை 2018 உடன் ஒப்பிடும்போது ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. சீனாவிடம் செயல்பாடுகள் அதிகப்படியான சாவல்களை அளிக்கிறது. இதேபோல், அறிவுசார் சொத்து திருட்டு மற்றும் முக்கிய மேற்கத்தியத் தேர்தல்களில் செல்வாக்குகள் தற்போது முக்கியப் பிரச்சனையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
திடீரெனச் சீனா பக்கம்
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் 1990 களில் இருந்து இருப்பது தான், ஆனால் திடீரென இப்போது அமெரிக்காவின் FBI மற்றும் பிரிட்டன் MI5 முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போரில் உலக நாடுகளில் என்னவெல்லாம் மாற்றம் நடந்ததோ, அதே மாற்றம் தான் சீனாவுக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா இடத்தில் சீனா வைக்கப்பட்டால் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் ஏற்கனவே செய்த தவறுகளை அமெரிக்கா, பிரிட்டன் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
சீனா - தைவான்
சீனா தற்போது தைவான் நாட்டைக் கைப்பற்றுவதற்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இப்படிச் செய்தால் ரஷ்யா எதிர்கொண்ட அதே தடைகளைத் தான் சீனாவும் எதிர்கொள்ளும். இதனால் சீனா இதற்காக முன்கூடியே தயாராகி விட்டு போர்டு தொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
மேற்கத்திய நாடுகள்
இதேபோல் சீனாவுக்குத் தற்போது மேற்கத்திய நாடுகள் எப்படி ராணுவ, பொருளாதாரம், அரசியல் வழியில் தாக்கம் என்பதை ரஷ்யா மீதான நடவடிக்கையில் பெரிய படிப்பினையைக் கொண்டு உள்ளது. இதனால் சீனா-வின் வேகமான திட்டமிடல், உற்பத்தி மற்றும் பணப் பலம் மூலம் எளிதாக வென்றிட முடியும்.
ரஷ்யா - சீனா டீம்
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரையில் காத்திருந்த ரஷ்யா, போர் தொடுத்தால் அனைத்து தேவைகளையும் சீனா பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்த பின்னரே தாக்கல் நடத்தியது.
அமெரிக்க, பிரிட்டன்
உதாரணமாக ஜெர்மனி எப்படி எரிபொருள், எரிவாயு-வுக்கு அதிகப்படியாக ரஷ்யா-வை நம்பியிருக்கிறதோ, அதேவகையில் அமெரிக்கா, பிரிட்டன் சீனாவை மிகப்பெரிய அளவில் பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு நம்பியுள்ளது. சீனா மீது தடை விதிப்பதால் சீனாவுக்கு மட்டும் அல்லாமல் தனக்கும் ஆபத்து என்பது தான் தற்போது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் புலம்பல்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications