இந்திய அரசு தொடுத்த வரி நிலுவை வழக்கில் தனியார் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி-க்குத் தீர்ப்பு வந்த நிலையில், நடுவர் தீர்ப்பாயம் நஷ்ட ஈடாக 1.2 பில்லியன் டாலர் மற்றும் 6 வருட வழக்கு காலத்திற்கான வட்டி தொகையையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகக் கெய்ர்ன் எனர்ஜி வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமாகச் சொத்துக்களை முடக்க அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் மேல்முறையீடு செய்து நஷ்டஈடு தொகையை விரைவாக முடிக்க வேண்டும் என இந்திய அரசைப் பயமுறுத்தி வருகிறது.

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்குச் சுமார் 1.72 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்திய அரசு அளிக்க வேண்டும், இந்தத் தொகையைக் கைப்பற்றுவதற்காக உலகம் முழுவதும் இருக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கணக்கிட்டும் கண்டறிந்தும் வருகிறது.
இதன் படி கெய்ர்ன் எனர்ஜி இதுவரை சுமார் 70 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களைக் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் தனது கிடைக்கவேண்டிய 1.2 பில்லியன் டாலர் மற்றும் வட்டி தொகைக்காக இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது. கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய அரசுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.
ஏர் இந்தியா விமானங்கள் மட்டும் அல்லாமல், ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியா, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஆயில் மற்றும் கேஸ் கார்கோ வாகனங்கள் எனப் பல சொத்துக்களைக் கண்டறிந்துள்ளது கெய்ர்ன் எனர்ஜி.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications