சீனாவுக்கு இணையாக இந்தியாவை உலகின் முன்னணி ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு விரைவில் 1 டிரில்லியன் டாலர் GDP கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் ஏற்றுமதிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான திட்டமாக விளங்கும் நிலையில் சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
நித்தின் கட்கரி
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நித்தின் கட்கரி திங்கட்கிழமை தனது டிவிட்டர் கணக்கில் சென்னை - மதுரவாயல் மத்தியில் 5800 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 20.5 கிலோமீட்டர் டபுள் டெக்கர் சாலை திட்டம் டிசம்பர் 2024-க்குள் முடிவடையும்.
சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை
இதேபோல் இந்த 20.5 கிலோமீட்டர் சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை திட்டம் மூலம் சென்னை துறைமுகத்தில் சரக்கு நிர்வாகச் செய்யும் அளவு 48 சதவீதம் வரையில் அதிகரிக்கும். இது மட்டும் அல்லாமல் துறைமுகத்தில் சரக்குக் காத்திருப்பு நேரம் 6 சதவீதம் வரையில் குறையும் என்றும் நித்தின் கட்கரி கூறியுள்ளார்.
4 பகுதிகள்
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் அமைய உள்ள இந்த டபுள் டெக்கர் சாலை திட்டம் 4 பகுதிகளாக முடிக்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் மத்திய அரசு புதிதாக உருவாக்கிய Gati Shakti திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளது. இதனால் எவ்விதமான தாமதமுமின்றி இயங்கும்.
வழக்கு
இத்திட்டத்திற்கான கட்டுமான டென்டர்கள் ஜூன் 2022 ல் அழைக்கப்பட்டது, 2012 துவங்கப்பட்ட இத்திட்டம் நீர்வளத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் வழக்குகள் காரணமாக நிறுத்தப்பட்டது.
நரேந்திர மோடி
இந்நிலையில் 2019ல் இத்திட்டத்தைத் துவக்க முடிவு எடுக்கப்பட்ட நிலையில் எல் அண்ட் டி நிறுவனத்தின் ஒரு சாலை திட்டத்தை டபுள் டெக்கர் சாலை திட்டமாக மாற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நித்தின் கட்கரி கூறினார். இதைத் தொடர்ந்து 2022ல் நரேந்திர மோடி இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-வை நடத்தினார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications