இந்தியா - சீன எல்லை பிரச்சனைக்குப் பின்பும் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் இயங்கி வரும் சீன மொபைல் செயலிகளைத் தனிநபர் தகவல் பாதுகாப்புக் காரணமாக அடுத்தடுத்துத் தடை செய்து வருகிறது.
இந்தத் தடை உத்தரவால் இந்தியாவுக்கும், இந்திய மொபைல் செயலி நிறுவனங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளும், நன்மைகளும் உருவாகியுள்ளது.
சீன செயலிகள் தடை
2020ஆம் ஆண்டிலேயே 100க்கும் அதிகமாக மொபைல் செயலிகள் பல கட்டங்களாகத் தடை செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பும் மீண்டும் 54 சீன செயலிகளைத் தடை செய்யப்பட்டது. இந்த 54 செயலிகள் நேரடியாக மற்றும் மறைமுகமாக சீனா உடனும், சீன நிறுவனங்களுடனும் தொடர்பில் உள்ளது.
ஷாட் வீடியோ செயலிகள்
2020ஆம் ஆண்டில் டிக்டாக் போன்ற பல செயலிகளைத் தடை செய்ததன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பல ஷாட் வீடியோ செயலிகள் மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது, அந்த வகையில் தற்போது இந்தியாவில் இருக்கும் கேமிங் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
பப்ஜி மொபைல், ப்ரீ பையர்
2020ல் மத்திய அரசு பப்ஜி மொபைல் செயலியை தடை செய்த போது, பப்ஜி வாடிக்கையாளர்கள் அனைவரையும் ப்ரீ பையர் கைப்பற்றியது. இதனால் இந்திய நிறுவனத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போனது, இந்த நிலையில் கடந்த வாரம் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 54 செயலிகளில் Garena Free Fire Illuminate செயலியும் இருந்த காரணத்தால் இந்தியாவின் கேமிங் துறை நிறுவனங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது.
5 பில்லியன் டாலர்
BCG மற்றும் Sequoia Capital ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் கேமிங் துறையானது தற்போது 1.5 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை ஈட்டி வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் சந்தையாக மூன்று மடங்கு வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது.
இந்திய கேமிங் நிறுவனங்கள்
தற்போது ப்ரீ பையர் போன்ற முன்னணி கேமிங் செயலி தடை செய்யப்பட்டு உள்ள காரணத்தால் இந்த 5 பில்லியன் டாலர் இலக்கை வேகமாக அடையும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இது இந்திய கேமிங் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications