உலக நாடுகளை ஒட்டுமொத்தமாகத் திருப்பிப் போட்ட கொரோனா, மக்களுக்கும் உயிர் பயத்தையும் தாண்டி கொரோனா-க்கு வாழவும் பயத்தையும் காட்டி வருகிறது என்றால் மிகையில்லை.
வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என வித்தியாசமின்றி அனைத்து நாட்டு மக்களும் விரிக்க முடியாத பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்திய மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வறிக்கை இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் புதிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணிநீக்கம் மற்றும் வறுமை
கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் ஏற்கனவே பொருளாதாரப் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இதோடு இந்தியாவில் சுமார் 13.5 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது ஒருமுக்கியமான ஆய்வறிக்கை. இது மட்டும் இல்லாமல் சுமார் 12 கோடி மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் இந்த ஆய்வுகள் கூறுகிறது.
தற்போது மக்களின் பயம் எல்லாம் இந்த 13.5 கோடியில் ஒருவராகத் தாம் இருந்து விடக் கூடாது என்பது தான்.
ஆய்வு
சர்வதசே மேலாண்மை ஆய்வு நிறுவனமான Arthur D Little நிறுவன அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா மூலம் ஏற்பட்டும் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் 13.5 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்கவும், 12 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இது இந்திய சந்தையில் ஏற்படப் போகும் மிகப்பெரிய மாற்றம்.
மாற்றம்
இந்த மாற்றத்தின் காரணமாக இந்திய மக்களின் வருமானம் குறைந்து, நுகர்வு பொருட்கள் மற்றும் அளவுகள் குறையும், இதேபோல் செலவுகளைக் குறைந்து கையில் இருக்கும் சிறிய அளவிலான பணத்தைச் சேமிப்பின் பக்கம் திருப்பவே அதிகளவில் முயற்சி செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் குறைந்து, நாட்டின் ஜிடிபி மற்றும் அதன் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது Arthur D Little ஆய்வு நிறுவனம்.
பொருளாதார வளர்ச்சி
இந்தியாவில் தற்போது கொரோனா-வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து 91,000 எண்ணிக்கையை நெருங்கி வரும் நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.8 சதவீதம் சரிந்து, 2021-22ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 0.8 சதவீதமாக வளர்ச்சி அடையும் என Arthur D Little ஆய்வுகள் கூறுகிறது.
அடுத்தச் சில ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் W வடிவ வளர்ச்சியைத் தான் அடையும் எனத் தெரிவித்துள்ளது Arthur D Little அமைப்பு.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications