இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவிற்கு 2,94,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே பலியானோர் எண்ணிக்கை 2,000 மேல். இந்தியாவில் மட்டும் மொத்தம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,82,570 பேராகும்.
இதற்கிடையில் நாட்டில் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாநில அரசுகளுக்கு இனி ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கே விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு
அரசுக்கும் தனியாருக்கும் இந்த விலை எனும் போது, இது அடுத்து மக்களுக்கு என்ன விலைக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. இது குறித்த எந்த தெளிவான அறிக்கையும் வரவில்லை. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதன் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்
எனினும் தான் தடுப்பூசியின் விலையானது தனியாருக்கு 1000 ரூபாய்க்கு வரலாம் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதனை குறைவாகத் தான் உள்ளது. இது மே 1 முதல் 18 வயதுக்குற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ள நிலையில் வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடுப்பூசி உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுகோள்
தற்போது நிலைமை மோசமாக உள்ள நிலையில், ஒவ்வொரு கார்ப்பரேட்டுகளுக்கும், தடுப்பூசியை தனித்தனியாக சப்ளை செய்வது என்பது சிக்கலான ஒரு விஷயம். ஆக கார்ப்பரேட்டுகளும், தனி நபர்களும் அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் வாயிலாகவும், தனியார் சுகாதார அமைப்புகளின் வாயிலாகவும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
முன்னர் விலை நிலவரம்
மேலும் 4 - 5 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி தாராள வர்த்தகத்தில் சந்தையில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளார் பூனாவாலா. ஏற்கனவே இந்த தடுப்பூசிகள் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்து விலையை குறைத்துள்ள நிலையில், தடுப்பு மருந்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications