இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவிற்கு 2,94,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே பலியானோர் எண்ணிக்கை 2,000 மேல். இந்தியாவில் மட்டும் மொத்தம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,82,570 பேராகும்.
இதற்கிடையில் நாட்டில் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாநில அரசுகளுக்கு இனி ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கே விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு
அரசுக்கும் தனியாருக்கும் இந்த விலை எனும் போது, இது அடுத்து மக்களுக்கு என்ன விலைக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. இது குறித்த எந்த தெளிவான அறிக்கையும் வரவில்லை. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதன் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்
எனினும் தான் தடுப்பூசியின் விலையானது தனியாருக்கு 1000 ரூபாய்க்கு வரலாம் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதனை குறைவாகத் தான் உள்ளது. இது மே 1 முதல் 18 வயதுக்குற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ள நிலையில் வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடுப்பூசி உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுகோள்
தற்போது நிலைமை மோசமாக உள்ள நிலையில், ஒவ்வொரு கார்ப்பரேட்டுகளுக்கும், தடுப்பூசியை தனித்தனியாக சப்ளை செய்வது என்பது சிக்கலான ஒரு விஷயம். ஆக கார்ப்பரேட்டுகளும், தனி நபர்களும் அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் வாயிலாகவும், தனியார் சுகாதார அமைப்புகளின் வாயிலாகவும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
முன்னர் விலை நிலவரம்
மேலும் 4 - 5 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி தாராள வர்த்தகத்தில் சந்தையில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளார் பூனாவாலா. ஏற்கனவே இந்த தடுப்பூசிகள் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்து விலையை குறைத்துள்ள நிலையில், தடுப்பு மருந்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications