இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான தாமதமும் இல்லாமல் மருத்துவமனையில் படுக்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக டெல்லி உயர் நீதிமன்ற இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான IRDAI-க்கு சில முக்கியமான உத்தரவுகளை விடுத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த உத்தரவுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற
நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற பென்ச் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்மிஷன் குறித்தும், நிர்வாகம் செய்யும் முறை குறித்துத் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் சில முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோயாளிகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்ப மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு, கொரோனா சிகிச்சைக்கான இன்சூரன்ஸ் வைத்துள்ள நோயாளிகளின் இன்சூரன்ஸ் கிளைம் ஒப்புதல் பெறப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்குத் தாமதமாகி வருகிறது.
இன்சூரன்ஸ் கிளைம் : 60 நிமிடத்திற்குள் ஒப்புதல்
இந்த நிலையை உடனடியாகச் சரி செய்யும் விதமாக நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற பென்ச், கொரோனா நோயாளிகளின் இன்சூரன்ஸ் கிளைம் கோரப்பட்டால் 30 நிமிடம் முதல் 60 நிமிடத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என இன்சூரன்ஸ் கட்டுப்பாடு அமைப்பான IRDAI-க்கு உத்தரவிட்டுள்ளது.
IRDAI அமைப்பு
இதன் மூலம் IRDAI தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் இருக்கும் அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது ஏஜென்ட்களை இதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, எவ்விதமான தாமதமும் இல்லாமல் இதைச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம்
இதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் இந்த 30 முதல் 60 நிமிட அவகாசத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளுக்கான பணிகளையும், புதிய அட்மிஷன்களைப் பெறுவதற்கான பணிகளையும் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்ற பென்ச்.
இந்தியாவின் நிலை
மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவது மூலம் பல உயிர்களையும் காப்பாற்ற முடியும், கால தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்குப் பல உயிர்கள் மருத்துவமனைக்கு வெளியில் துடித்துக்கொண்டு உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications