தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார்மயமாகிறதா? என மக்களையில் திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய விமான போகுவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் மக்களவையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டிற்குள் 25 விமான நிலையங்களை அரசு தனியார்மயமாக்க திட்டமிடப்படுள்ளதாக கூறியுள்ளார்.
இது சொத்தினை பணமக்குதலுக்கான மத்திய அரசின் திட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள்
நாக்பூர், வாராணாசி, டேராடூன், திருச்சி, இந்தூர், சென்னை, கோழிக்கோடு, கோயமுத்தூர், புவனேஷ்வர் மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களில் 25 விமான நிலையங்களை அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த தனியார்மயமாக்கல் திட்டத்தில் மதுரை விமான நிலையம், திருப்பதி, ராஞ்சி, ஜோத்பூர், ராய்ப்பூர், ராஜமுந்திரி, வதோதரா, அமிர்தசரஸ், சூரத், ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்ப்பூர், போபால் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட விமான நிலையங்களும் இதில் அடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 சர்வதேச விமான நிறுவனங்கள்
இது குறித்து மக்களவைத் தலைவர் டி ஆர் பாலு, மத்திய அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்திட திட்டமிட்டுள்ளதா? இதில் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களையும் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விகே சிங், திருச்சி பன்னாட்டு விமான நிலையம் உள்பட 13 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளது.
உரிமக் காலம்
இந்த நடவடிக்கையானது விமான நிலையங்களை மேம்படுத்த பொது நலம் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். விமான நிலையங்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகள் அனைத்தும் ஆணையத்தின் சொத்துக்களாகவே தொடங்கும். உரிமக் காலம் முடிவடைந்தவுடன் சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் இந்திய விமான நிலையங்களுக்கு திரும்ப வரும்.
தமிழக விமான நிலையம்
தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையங்கள், தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோயமுத்தூர், சென்னை விமான நிலையங்களும் அடங்கும் என சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் பதிலளித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications