நடப்பு ஆண்டு முடிந்து புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில், டிசம்பர் 31-க்குள் மறக்காமல் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நடப்பு காலாண்ட ர் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜனவரி 1ல் இருந்து பல நிதி ரீதியிலான மாற்றங்கள் வரவுள்ளன.
ஆக இதனை செய்யாமல் தவறும் பட்சத்தில் அபராதம் கட்ட நேரிடலாம். பணம் மட்டும் அல்ல, இதனால் மீண்டும் உங்களது கடமைகளை செய்ய கூடுதலாக நேரம் செலவழிக்க நேரலாம். ஆக சரியான நேரத்தில் இந்த 4 விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயம் PF நாமினியை அப்டேட் செய்யுங்கள்
முதல் நாம் பார்க்கவிருப்பது உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாமினியின் பெயரை அப்டேட் செய்வது. இது குறித்து EPFO ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் கட்டாயம் டிசம்பர்31, 2021-க்குள் நாமினியை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி அப்டேட் செய்யாவிடில் பின்னாளில் உங்களுக்கு இது பிரச்சனைகளாக மாறக்கூடும். உதாரணத்திற்கு இன்சூரன்ஸ், பென்சன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காமல் போகலாம். ஆக டிசம்பர் 31க்குள் கட்டாயம் ஊழியர்கள் இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை ஆன்லைனிலேயே கூட அப்டேட் செய்து கொள்ள முடியும். இதனை எப்படி அப்டேட் செய்வது என https://tamil.goodreturns.in/classroom/how-to-add-or-change-nominee-in-epf-account-online-check-details/articlecontent-pf135303-025706.html என்ற பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ITR தாக்கல் கடைசி தேதி
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால், மத்திய அரசு 2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யச் செப்டம்பர் வரையில் கால நீட்டிப்பு செய்திருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு, வருமான வரி தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் என பல காரணிகளினால் இது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தான் இதற்கான கால அவகாசத்தினை டிசம்பர் 31 வரையில் அரசு நீட்டித்தது.
ஜீவன் பிரமாண் பத்திரம்
பென்சன் வாங்கிக் கொண்டிருக்கும் நபர்கள் மறக்காமல் டிசம்பர் 31-க்குள் தங்களது ஜீவன் பிரமாண் பத்திரம் எனப்படும் வாழ்வு சான்றிதழை அவசியம் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-க்குள் செய்திட வேண்டும். பென்சன் பெற ஓய்வூதியதாரர்கள் இதனை கொடுக்க வேண்டியது மிக அவசியமானதாகிறது. இதனையும் ஆன்லைனிலேயே பெறும் வசதிகள் வந்துவிட்டது.
ஆதார் + UAN இணைப்பு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சம்பளம் பெறும் நபர்களின் ஆதார் எண்ணை அவர்களின் ஈபிஎஃப் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை முன்னதாக நீட்டித்துள்ளது. இது குறித்து பல முறை எச்சரித்தும் உள்ளது. இந்த் நிலையில் கடைசியாக டிசம்பர் 31, 2021 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அப்டேட் செய்யாவிடில் பின்னர் பிஎஃப் தொகை எடுக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய பரிவர்த்தனையின்போது பிரச்சனைகள் எழலாம். ஆக மறக்காமல் டிசம்பர் 31-க்குள் இதனை அப்டேட் செய்து விடுங்கள்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications