போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனை மார்கெட்டிங் கால் தான், இந்தப் பிரச்சனை தீர்க்கும் வகையில் டெலிகாம் துறை அமைச்சகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெலிகாம் துறை அமைச்சகம்
டெலிகாம் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 50 முறைக்கு மேல் விதி மீறல்கள் செய்யும் அனைத்து டெலிகாம் மார்கெட்டர்களின் ஒவ்வொரு கால் மற்றும் குறுஞ்செய்திக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மார்கெட்டிங் கால் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளைச் சட்டத்தில் கொண்டு வந்துள்ளது டெலிகாம் துறை அமைச்சகம்.
புதிய விதிமுறை
இப்புதிய விதிமுறை கீழ் 0-10 முறைக்கு விதி மீறல்களுக்கு ஒவ்வொரு கால் மற்றும் குறுஞ்செய்திக்கு 1000 ரூபாயும், 10-50வது விதி மீறல்களுக்கு 5000 ரூபாயும், 50 முறைக்கு மேல் தொல்லை தருபவர்களுக்கு 10000 ரூபாய் எனப் புதிய அபராத முறையைக் கொண்டு வந்துள்ளது.
கருவி அடையாள எண்
தற்போது நடைமுறையில் 0-100, 100-1000 மற்றும் 1000த்திற்கு மேல் என்று உள்ளது, இதைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டெலிகாம் துறை அமைச்சகம் இந்த அபராதம் விதிக்க Digital Intelligence Unit (DIU) வாயிலாகக் கருவியின் அடையாள எண் அடிப்படையில் கண்காணிக்க உள்ளது.
டெலிமார்கெட்டிங் கால்
தொல்லைத்தரும் டெலிமார்கெட்டிங் கால் அல்லது எஸ்எம்எஸ் செய்யப்பட்டும் மொபைல் அல்லது கருவியின் IMEI கண்டறிந்து கண்டறிந்து 30 நாட்களுக்குப் பிளாக் செய்யப்படும். 30 நாட்களுக்குப் பின் மீண்டும் மறு ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படும் கருவிகளுக்கு 6 மாதம் தினமும் 20 அழைப்புகள், 20 எஸ்எம்எஸ்-களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
சிம் கார்டு மற்றும் கருவி
இதன் மூலம் சிம் கார்டு மாற்றுவது மட்டும் அல்லாமல் கருவியையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் இனி தொல்லைத்தரும் டெலிமார்கெட்டிங் கால் அல்லது எஸ்எம்எஸ் வருவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications