பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்தே, அடுத்தடுத்த அதிர்ச்சியான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது..
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளே இருந்து வருகின்றது.
குறிப்பாக எலான் மஸ்க் கையகப்படுத்திய முதல் நாளே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி உட்பட பல முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதன் பிறகு பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இதுவே அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
வெறும் 1300 ஊழியர்கள்
இதற்கிடையில் ட்விட்டரில் மொத்தம் சுமார் 1300 பேர் தான் உள்ளனர். அதிலும் 550 பேர் முழு நேர பொறியாளர்கள் என்றும் கூறப்பட்டது. மொத்தத்தில் சுமார் 7000 பேர் இருந்த ஒரு நிறுவனத்தில் வெறும் 1300 பேர் தான் இருக்கிறார்கள் என்பது ஓராயிரம் கேள்விகளை எழுப்பியது. ட்விட்டரின் எதிர்காலம் குறித்த கேள்வியினையும் எழுப்பியது.
ஆக்டிவ் ஊழியர்கள்
இதற்கிடையில் இது குறித்து விளக்கமளித்துள்ள எலான் மஸ்க், தற்போது டவிட்டரில் 2300 ஆக்டிவ் ஊழியர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் நிறுவனத்தில் இன்னும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பல ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் பாதுகாப்புடனும், நம்பிக்கையுடனும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். எனது மற்ற நிறுவனத்தினை சேர்ந்த 10-க்கும் குறைவானவர்கள் தற்போது ட்விட்டரில் பணி புரிகின்றனர் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அறிக்கைகள் சொல்வதென்ன?
எனினும் 1300 ஊழியர்கள் தான் இருப்பதாக வெளியான அறிக்கையில் சுமார் 1300 ஊழியர்களில், சுமார் 75 பேர் தற்போது விடுப்பில் உள்ளதாகவும், இதில் சுமார் 40 பொறியாளர்கள் உள்ளனர் என்றும் CNBC அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நடவடிக்கை
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிறுவனத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது ஒரு புறம் எனில், மறுபுறம் ட்விட்டர் ப்ளூ டிக் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியது. எனினும் இது பெரியளவில் கைகொடுக்கவில்லை. எனினும் அதில் சில திருத்தங்களை செய்து, மீண்டும் புதுப்பிக்க முயற்சி செய்து வருகின்றது.
பலரும் பணி நீக்கம்
இதற்கிடையில் எலான் மஸ்க் கையகப்படுத்தியபோது 7000 பேருக்கு மேலாக இருந்தனர். அதன் பிறகு 50% பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் நிறுவனம் 75% பணி நீக்கம் செய்யவில்லை. ட்விட்டர் மட்டுமே இந்த காலகட்டத்தில் பணி நீக்கம் செய்யவில்லை. டெக் ஜாம்பவான்களான கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் 12,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே அமேசான் நிறுவனமும் அதன் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications