கொரோனா வைரஸினால் இன்று உலகமே நடு நடுங்கி போயுள்ளது என்று தான் கூற வேண்டும். இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து, ஒரு வித அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் எங்கு சென்றாலும், அங்கு என்ன நடக்கிறது. யாரேனும் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட, அது பலருக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூட தயக்கம் காட்டுகிறார்கள்.
ஆனால் அதிலும் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் சில நல்ல விஷயங்களும் உண்டு.
பிரச்சனைகளில் மாற்றம் வரலாம்
அதில் இன்று நாம் காணப் போவது தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் சில மாற்றங்கள் தான். ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது தொடர்வதால் இந்தக் கொள்கைகளில் மாற்றங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் விதமாக தொழிலாளர் கொள்கைகளில் மாற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய பணிச் சூழலுக்கு ஏற்றவாறு சம்பள விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம்.
பொருத்தமான சம்பளம்
மேலும் ஊழியர்களுக்கான விடுமுறை குறித்தான கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்கிறது ஒரு அறிக்கை. மேலும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள், வங்கித் துறைகள், வேகமாக நுகரும் பொருட்கள், ஆட்டோமொபைல் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் மிகப் பொருத்தமான சம்பள கூறுகளை அறிமுகப்படுத்துகின்றன என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய கொள்கைகள்
மேலும் நிறுவனங்கள் துறைவாரியாக பணியிடங்கள் மற்றும் மனித வள கொள்கைகள் என புதிய கொள்கைகள் என மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துகின்றன என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்ட நிபுணரான கைதன் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரர் அன்ஷூவல் பிரகாஷ் கூறியுள்ளார்.
செலவு குறையும்
எனினும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் பயண செலவுகள் குறையும். இதன் காரணமாக அவர்களுக்கு பயண செலவு குறையும். இதனால் நிறுவனங்கள் செலுத்தும் அலவன்ஸ் செலவுகள் குறையும். அதே போல எரிபொருளுக்கென கொடுக்கும் அலவன்ஸ், ஓட்டுனர்களுக்கு கொடுக்கும் செலவு, வாகனங்களை பராமரிக்கும் செலவு உள்ளிட்டவை குறையும் என்றும் பிரகாஷ் கூறியுள்ளார்.
இப்படி கூட இருக்கலாம்
ஆக இதன் மூலம் சேமிக்கும் பணத்தினை செயல்பாட்டு செலவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் புதிய திருத்தத்தில் அதிவேக இணைய இணைப்புகளுக்கான அலவன்ஸ் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர்களின் அறிக்கை படி, உடல் ஆரோக்கிய பயன்பாடுகள், வீட்டு அலுவலக வசதிகள், வீட்டு உதவி அல்லது குழந்தை பராமரிப்புக்கான செலவுகள் போன்ற அலவன்ஸ்களை உள்ளடக்கியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். எது எப்படியோங்க ஊழியர்களுக்கு நல்லது நடந்தால் நல்ல விஷயம் தானே.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications