சமீப நாட்களாக ஐடி துறைக்கு சாதகமான செய்திகள் வெளியே வந்து கொண்டிருந்ததையடுத்து, அது ஐடி ஊழியர்களுக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டது.
இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி வந்தன. இதன் காரணமாக சந்தோஷத்தின் உச்சிக்கே ஐடி ஊழியர்கள் சென்றனர்.
ஆனால் இதனை ஒட்டுமொத்தமாக வாரி எடுத்துச் செல்லும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஊழியர் சங்கம் குற்றம் சாட்டல்
அது ஐடி ஜாம்பவான்களில் ஒருவரான காக்ணிசன்ட் நிறுவனம், தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக ஒரு புத்திசாலித்தனமான விஷயத்தினை கையாண்டுள்ளது என ஐடி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஒரு அறிக்கையையும் ஐடி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன் படி காக்ணிசன்ட் அதன் திட்டத்தினை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
41 நாட்களுக்கு பிறகு ராஜினாமா செய்யுங்கள்
சரி அப்படி என்ன தான் காக்ணிசன்ட் நிறுவனம் சொன்னது வாருங்கள் பார்க்கலாம். அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான காக்ணிசன்ட், அதன் சென்னை அலுவலகங்களில் உள்ள பெஞ்ச் ஊழியர்களை 41 நாட்களுக்கு பிறகு அவர்களின் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்டாயபடுத்துவதாக கூறப்படுகிறது. இது குறித்து NDLF குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.
அடுத்தடுத்த புகார்கள்
இது குறித்து NDLF வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாங்கள் காக்ணிசன்ட் பணி நீக்கம் செய்ய தீவிரமாக முயன்று வருவதை நாங்கள் அறிந்தோம். அவர்களது ஊழியர்களில் பலர் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ளனர், அவர்களில் உள்ள தொழில்சங்க உறுப்பினர்களில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ராஜினாமா குறித்த அச்சுறுத்தல் புகார்கள் எங்களிடம் வந்துள்ளன.
பெஞ்ச் ஊழியர்களை குறிவைக்க என்ன காரணம்?
காக்ணிசன்ட் குறிப்பாக அதன் பெஞ்ச் ஊழியர்களை ராஜினாமா செய்ய சொல்ல காரணம் என்ன? ஐடி துறைகளில் பெஞ்ச் ஊழியர்கள், செயலில் உள்ள திட்டங்களில் இல்லாதவர்கள். எதிர்கால திட்டங்களுக்கான வைக்கப்படுகிறார்கள். ஒரு ஊழியர் பெஞ்சில் வைக்கப்பட்டவுன் காக்ணிசன்ட் அவர்களை மேம்படுத்துவதற்கு 35 நாட்கள் அவகாசம் வழங்கும். அதன் பிறகு ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தும்.
புதிய திட்டம் என்ன?
இந்த 35 நாட்களுக்கு பிறகு 6 நாட்கள் நீட்டிக்கப்படும். ஆக அந்த 41 நாட்களில் அந்த ஊழியருக்கு ஒரு புதிய திட்டத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்கிறது. அவ்வாறு நிறுவனம் கூறுவது போல் ராஜினாமா செய்யவில்லை எனில், அவர்கள் அச்சுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆக இந்த முறைப்படி பல ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதையும் நாங்கள் அறிவோம் என்றும் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சாத்தியமற்றது.
41 நாட்களில் ஒரு புதிய திறனுடன் புதிய திட்டத்தினை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்ற விஷயம். ஆக காக்ணிசன்ட் மறைமுகமாக தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்கிறது. கடந்த சில நாட்களில் காக்ணிசன்ட் அலுவலகங்களைக் சேர்ந்த பல ஊழியர்கள் ஏற்கனவே தங்களது கடமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications