டெல்லி: டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அதில் பல பாதிப்புகளும், பிரச்சனைகளும் உடன் வந்துகொண்டே இருக்கிறது.
தற்போது முக்கியமான பிரச்சனை என்னவென்றால் உலகிலேயே அதிகப்படியான ஆண்ட்ராய்டு டிரோஜன் இருப்பது இந்தியாவில் தான் என்றும், இந்தியாவில் போலியான வாஸ்ட்அப் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் மக்களின் சேட் மெசேஜ் உட்படப் பல்வேறு தனிநபர் விபரங்கள் திருடப்பட்டு வருவதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
நீங்களும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா..?
வாட்ஸ்அப் செயலி
வாட்ஸ்அப் செயலி போலவே இருக்கும் குளோன் செய்யப்பட்ட, 3ஆம் தரப்பின் போலி வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். GB WhatsApp என்ற பெயரில் இருக்கும் இந்த வாட்ஸ்அப் பல தவறுகளைச் செய்து வருவதாகச் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET தெரிவித்துள்ளது.
ஆடியோ, வீடியோ திருட்டு
இதுபோன்ற போலி மற்றும் பாதுகாப்பற்ற செயலிகள் மூலம் நீங்கள் பேசுவதை உங்களின் போனில் இருந்து ரெக்கார்டு செய்ய முடியும், இதேபோல் வீடியோவும் ரெக்கார்டு செய்ய முடியும் எனச் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET தெரிவித்துள்ளது. GB WhatsApp செயலி ப்ளே ஸ்டோரில் இல்லை, ஆனால் இணையத்தில் பல வழிகளில் இருந்து ஊடுருவி வருகிறது.
'Mozi' botnet
இதேபோல் உலகளவில் அதிகளவிலான ஜியோலொகேஷன் IoT பாட்-கள் இருக்கும் நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் பாட்களின் பெயர் MOZI என்ற அழைக்கப்படுகிறது, 'Mozi' botnet ஆட்டோபைலட் முறையில் இயங்கும் தன்மை கொண்டது.
தனிநபர் திருட்டு
'Mozi' botnet உங்கள் பாஸ்வேர்டு, ஆடியோ, வீடியோ போன்ற பல விஷயங்களைத் திருட முடியும். இது முழுக்க முழுக்கத் தனிநபர் தகவல்களைத் திருடுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பதால் மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
மக்களே உஷார்
முதலில் உங்கள் போனில் இருப்பது சரியான வாஸ்ட்அப் செயலி தானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். GB WhatsApp செயலி பெயரில் அல்லது வேறு வாட்ஸ்அப் செயலிகளையோ வைத்திருந்தால் உடனடியாக டெலிட் செய்துவிட்டு போன் factory reset செய்துவிடுங்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications