கொரோனா வைரஸ் காலத்தில், பணத்தை கையாள்வது கூட பயமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சூரத்தில் கீழே கிடந்த 2,000 ரூபாய் நோட்டைக் கூட யாரும் கையில் எடுக்கவில்லை.
மாறாக அதன் மீது கல்லை வைத்துவிட்டு, காவலர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். அந்த அளவுக்கு கொரோனா குறித்து, பயம் கலந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
இந்த நல்ல விஷயத்தை பெரிய அளவில் செய்ய, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், FASTag தொடர்பாக ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறதாம்.
FASTag
டோல் கேட்களில் மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளைக் குறைக்கத் தான் FASTag கொண்டு வந்தார்கள். ஆனால் மக்கள் FASTag வாங்கி வைத்துக் கொண்டு, கணக்கை ரீசார்ஜ் செய்யாமல் இருக்கிறார்கள். இப்போது எல்லோரும் கட்டாயம் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
100 % அபராதம்
அப்படி அரசு சொல்வது போல எல்லோரும் தங்கள் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், 100 % அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆம். ஒரு டோலை கடக்க 100 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது என்றால், FASTag-ல் பணம் இல்லாதவர்கள், 200 ரூபாய் செலுத்த வேண்டி இருக்குமாம்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
இந்த உத்தரவை கடந்த மே 15, 2020 அன்றே மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பிறப்பித்து இருக்கிறார்களாம். இப்போது வரை FASTag இல்லாத வாகனங்கள் தான் இரண்டு மடங்கு டோல் கட்டணத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அமைச்சகத்தின் இந்த புதிய உத்தரவால், இனி FASTag-ஐ முறையாக ரீசார்ஜ் செய்யாதவர்களும், 2 மடங்கு டோல் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை
கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவிக் கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில், FASTag-ஐ முழுமையாக பயன்படுத்தி, ரொக்கம் வழியாக டோல் கட்டணம் செலுத்தப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ், ரொக்க பணம் மூலமாக பரவுவதை தடுக்க உதவும் எனச் சொல்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.
FASTag பயன் இல்லாமல் போய்விடுமே
டோல்களில், மக்கள் ரொக்கத்தைக் கொடுத்து கட்டணம் செலுத்திக் கொண்டு இருந்தால், FASTag விதியை முழுமையாக பின்பற்றும் மக்கள் இடையூறுகளுக்கு ஆளாகிறார்கள். FASTag கொண்டு வந்ததே பயணத்தை விரைவு படுத்துவதற்கும், ரொக்க பணப் பரிவர்த்தனையை குறைப்பதற்கும் தானே..! அதுவே அடிபட்டு போகும் என்றால் பிறகு FASTag-ஆல் என்ன பயன்..? என்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications