இந்தியாவில், பொதுவாக வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு, செலுத்த வேண்டிய இ எம் ஐ தவணைகளை, ஒத்திவைக்க, கடந்த மார்ச் 2020-ல் இருந்து அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இ எம் ஐ ஒத்திவைப்பு கால அவகாசம் ஆகஸ்ட் 31, 2020 உடன் ஒரு முடிவுக்கு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், விருந்தோம்பல் துறை என்று சொல்லப்படும் உணவகங்கள், ஹோட்டல்கள் எல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இ எம் ஐ ஒத்திவைப்பு நீட்டிப்பு
இந்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களுக்கான இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அல்லது விருந்தோம்பல் துறையினர்கள் வாங்கி இருக்கும் கடன்களை மறு சீரமைக்க (Loan Restructuring) வேண்டிய தேவை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆர்பிஐ உடன் பேச்சு
விருந்தோம்பல் துறையில் வியாபாரம் செய்பவர்களின் கடன்களுக்கான தவணை ஒத்திவைப்பு, கடன் மறு சீரமைப்பு தொடர்பாக, நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி உடன் பேசிக் கொண்டு இருப்பதாக, ஒரு ஃபிக்கி அமைப்பு கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார்.
ஹோட்டல் துறை கோரிக்கை
இந்த கொரோனா பிரச்சனையால், சுமாராக 90 சதவிகிதம் வியாபாரம் அடி வாங்கி இருக்கிறது. இந்தியாவில் விருந்தோம்பல் துறை சார்ந்து சுமாராக 4.5 கோடி மக்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எனவே வங்கிக் கடன்களில் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள் Hotel Association of India (HAI) அமைப்பினர்.
வங்கிகள் தரப்பு
ஆனால் வங்கிகளோ, இதற்கு மேலும் கடன் தவணைகளை ஒத்திவைக்கும் (EMI Moratorium) நடவடிக்கையை நீட்டிக்கக் கூடாது என தங்கள் தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். சமீபத்தில் ஹெச் டி எஃப் சியின் தலைவர் தீபக் பரேக், இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்கக் கூடாது என, ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸுக்குச் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications