இந்தியாவின் முதல் பசுமை பத்திரங்கள்.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஏற்கனவே பசுமை பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

கடந்த பட்ஜெட்டின் போது இதுகுறித்து அமைச்சர் கூறிய நிலையில் தற்போது பசுமை பத்திரங்களை வெளியிடுவதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியபோது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் பசுமை பத்திரங்கள் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மைனஸ் வட்டியில் அரசு பத்திரங்களை விற்கும் சீனா.. ஏன்.. என்ன ஆச்சு..? மைனஸ் வட்டியில் அரசு பத்திரங்களை விற்கும் சீனா.. ஏன்.. என்ன ஆச்சு..?

பசுமை பத்திரங்கள்

பசுமை பத்திரங்கள்

பசுமை பத்திரங்கள் மூலம் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது என்றும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்த திட்டத்தின் ஒரு பகுதி தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

நீண்டகால பத்திரங்கள்

நீண்டகால பத்திரங்கள்

பசுமை பத்திரங்கள் வெளியிடுவதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் அனுமதி பெறப்பட்டு இந்த பத்திரங்கள் வெளியிடப்படும் என்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நீண்டகால பாத்திரங்களாக இவை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பசுமை பத்திரங்கள் வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பொது திட்டங்கள்

பொது திட்டங்கள்

பசுமை பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதி அரசின் பொது திட்டங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 5.95 கோடி ரூபாய் சந்தை யில் கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Minister Nirmala Sitaraman Approves India’s First Sovereign Green Bonds!

Union Finance Minister Nirmala Sitharaman had said that there are already plans to issue green bonds in India. The Ministry of Finance has said that while the minister had said this during the last budget, now the basic work for issuing green bonds has been completed.
Story first published: Thursday, November 10, 2022, 14:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X