டெல்லி: போர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41 வது இடத்தினை பிடித்துள்ளார்.
இதே முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல்லின் தலைமை செயல் அதிகாரியான ரோஷினி நாடார், பயோகான் நிறுவனர் கிரண் மஜூர்தார் மற்றும் லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரானா ரேணுகா ஜக்தியானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 17வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு, 30 நாடுகளை சேர்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் கமலா ஹாரிஸ்
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது ஆண்டாக 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் 3வது இடத்தில் உள்ளார். மேலும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய பெண்கள் எத்தனையாவது இடம்
இந்தியா பெண்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹெச்சிஎல் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம் பெற்றுள்ள நிர்மலா சீதாராமன் 41வது இடத்தையும், ரோஷினி நாடார் 55வது இடத்தையும் பிடித்துள்ளனர். பயோகான் நிறுவனர் கிரண் மஜூர்தார் 68வது இடத்திலும், லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரானா ரேணுகா ஜக்தியானி 98 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளும் உண்டு
இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். அதோடு இந்த பட்டியலில் 10 நாட்டு பெரும் தலைவர்களும், 38 தலைமை நிர்வாக அதிகாரிகளும், 5 எண்டர்டெயினர்களும் உள்ளனர். இவர்கள் தவிர கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகை வீழ்ச்சியிலிருந்து மீட்கும் அரசியல்வாதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications