2019ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பல புதிய பாடங்களையும், அனுபவங்களையும் கொடுத்தது என்றால் மிகையில்லை, ஏனெனில் பல திட்டமிட்ட முதலீடுகள் சரிவையும், பல முதலீடுகள் எதிர்பாராத லாபத்தையும் கொடுத்தது. இது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவருக்குமே பொருந்தும்.
எப்போதும் ப்ளூ சிப் பங்குகளில் மட்டும் அதிகளவில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FPI) 2019ஆம் ஆண்டு மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளனர். அப்படி பன்னாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்த டாப் 10 சிறு நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
இதை தெரிந்துகொள்வதால் என்ன லாபம்..?
அன்னிய முதலீட்டாளர்கள்
பொதுவாக அன்னிய முதலீட்டாளர்கள் நிச்சயம் லாபம் வரும், முதலீட்டுக்கு எந்த பிரச்சனையும் வராது என்பதை முதலீடு செய்வார்கள், நாமும் அப்படி தான் என நீங்கள் சொல்வது புரிகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு துறையில் முதலீடு செய்யும் முன்னர் ஒரு பெரிய குழுவை வைத்து மொத்தமும் ஆய்வு செய்து அதன் எதிர்காலத்தைப் பல கோணங்களில் ஆய்வு செய்து தரவுகள் சரியாக இருந்தால் மட்டுமே முதலீடு செய்வார்கள்.
என்ன லாபம்..?
இவ்வளவு பாதுகாப்பாக முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்கள் திடீரென தனது வழக்கத்திற்கு மாறாக, அதாவது ப்ளூ சிப் பங்குகளை விடுத்து மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது என்றால் நிச்சயம் முக்கியமான காரணம் இருக்கும்.
இந்நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் அல்லது துறைகளை தெரிந்துகொண்டால் நீங்களும் முதலீடு செய்து அதிகளவிலான லாபத்தைப் பெற்ற முடியும்.
ஸ்மால் கேப் பங்குகள்
ஸ்மால் கேப் பங்குகள் என்பது ஆபத்து நிறைந்த ஒரு பிரிவு. ஆனால் லாபம் அதிகமாகக் கிடைக்கும். இப்படியிருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் மும்பை பங்குச்சந்தையில் பல சிறு, குறு நிறுவனங்களில் முதலீடு செய்து குறைந்தபட்சம் 15 முதல் அதிகப்படியாக 40 சதவீதம் வரையிலான லாபத்தை வெறும் ஒரு வருடத்தில் எடுத்துள்ளது.
இதை விட நமக்கு என்ன வேண்டும் சொல்லுங்க..!!
டாப் 10 நிறுவனங்கள்
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்
ரெடிங்டன் இந்தியா
ஈக்விடாஸ் ஹோல்டிங்
பஜாஜ் கன்ஸ்யூமர்
ஜிஐசி ஹவுசிங்
ஏஸ்டர் டிஎம் ஹெல்த்கேர்
கல்ப் ஆயில் லூப்ரிகேன்ட்
பிஎஸ்சி
ஐடிஎப்சி