ஜெர்மன் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான Lufthansa கொரோனா காரணமாக அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து நிற்கிறது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த 1 வருடத்திற்கு விமானப் போக்குவரத்துத் துறை மீண்டு வராது என்கிற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டுள்ளது சர்வதேச விமானப் போக்குவரத்து.
இதன் எதிரொலியாக இன்று Lufthansa நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி குறைவாக இருக்கும் எனக் கணிப்பு இருப்பதால், செலவுகளைக் குறைக்க நிறுவனத்தில் இருந்து 22,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் Lufthansa ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Lufthansa
ஐரோப்பியாவில் இருந்து உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு விமானச் சேவை அளித்து வரும் மாபெரும் நிறுவனமான Lufthansa கொரோனா வந்த பின்பு 100 விமானப் பயணங்களுக்குக் குறைவான எண்ணிக்கையில் தான் சேவை கொடுத்துள்ளது. இந்நிலையில் நிர்வாகத்தை மேம்படுத்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
20000 ஊழியர்கள்
விமானச் சேவை முடங்கிய காரணத்தால் Lufthansa வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக Lufthansa நிர்வாகம் தனது 1,35,000 ஊழியர்களில் 16 சதவீதம் அதாவது 20,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும், சக போட்டி நிறுவனங்கள் மத்தியில் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விமானம்
Lufthansa நிறுவனத்தில் சுமார் 763 விமானங்கள் உள்ளது, இதில் 700 விமானங்கள் தரையில் நிற்கிறது. கொரோனா காரணமாகப் பல நாடுகள் விமான எல்லைகளை மூடியுள்ள நிலையிலும், விமானப் பயணிகள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் சேவையை விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது.
நஷ்டம்
ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக இருக்கும் Lufthansa முதல் முறையாக 2.1 பில்லியன் யூரோ நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தைக் காக்கவும், வர்த்தகத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் இந்நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளில் ஜெர்மன் நிறுவன முதலீடு செய்து சுமார் 9 பில்லியன் யூரோ நிதியைப் பெற்றுள்ளது.
பங்கு மதிப்பு
முதல் முறையாக நஷ்டம், வர்த்தகச் சரிவு, இத்துறையின் வர்த்தக மீட்பு கணிப்பு ஆகியவை Frankfurt's Dax 30 குறியீட்டில் Lufthansa நிறுவனப் பங்கு மதிப்பு அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.