முன்பாக சொத்து பதிவுக்கு சந்தையின் உயர் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பத்திரபதிவு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது.
பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த கூடுதல் சுமையை குறைக்கும் பொருட்டு, தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடியாக ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இனி ஒரு சொத்தினை பதிவு செய்யும்போது, அந்த பகுதியின் அரசு வழிகாட்டி மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கட்டணமாக வசூலிக்கப்படும். சந்தையின் உயர் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என உத்தரவிட்டுள்ளார்.
பல குளறுபடிகள்
பழைய முறையில் பல குளறுபடிகள் நிலவி வந்த நிலையில், பதிவுக்கு வரும் ஆவணங்கள் பதிவு செய்ய தாமதமாகி வந்தன. அதோடு மாவட்ட பதிவாளர்களை அணுகுவதும் அதிகரித்துள்ளது. இது குறித்து தெளிவான வழிகாட்டுதல் என்பது இல்லாத நிலையில், இந்த பத்திர பதிவு கட்டணம் வசூலிப்பதிலும் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்தன. ஆக இந்த குளறுபடிகளை நீக்கவே இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.
இனி கட்டணம் குறையலாம்
இதனால் இனி பத்திர பதிவு கட்டணங்கள் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசின் இந்த நடவடிக்கையானது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
அதோடு ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என பதிவுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சராசரி பதிவு
தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விவசாய நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது.
சில முறைகேடுகள்
இப்படி செய்யப்படும் பத்திரப்பதிவின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்து வருகின்றன. பல்வேறு காரணங்களை கூறி பதிவு செய்யப்படும் ஆவணங்களை திருப்பி தராமல் சார்பதிவாளர்கள் இழுத்தடிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கட்டணத்தில் குளறுபடி
குறிப்பாக, வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்வதில் குளறுபடி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரம் பதிவு செய்வதாக பல அலுவலகங்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
15 நாட்கள் தான் டைம்
மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள ஆவணங்களை அடுத்த 15 நாட்களில் முடிக்க அறிவுரை வழங்கி உள்ளார். மேலும் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தும் முழு வடிவில் இருந்தால் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அந்த ஆவணங்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications