IT sector Updates:ஐடி துறையில் கடந்த சில மாதங்களாகவே பணியமர்த்தல் என்பது மிக குறைவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் பணியமர்த்தல் என்பது பெரியளவில் குறைந்துள்ளது எனலாம். எனினும் பிரெஷ்ஷர்களுக்கான வாய்ப்பு என்பது குறைந்திருந்தாலும், தொடர்ந்து பணியமர்த்தல் இருந்து வருகின்றது எனலாம்.
முன்னதாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் வாய்ப்பினை அறிவித்தது. தற்போது அதனை தொடர்ந்து விப்ரோ நிறுவனமும் பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம்.
கொரோனா காலகட்டம்
பொதுவாக ஐடி நிறுவனங்கள் பலவும் கொரோனா காலக்கட்டத்திலேயே அதிக ஊழியர்கள் தேவை மற்றும் அதிகளவிலான அட்ரிஷன் காரணமாக பிரெஷ்ஷர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்திக் கொண்டன. இது ஐடி பிரெஷ்ஷர்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனினும் இந்த போக்கானது சமீபத்திய மாதங்களாகவே குறைந்துள்ளது.
தேவை சரிவு
தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினை கண்டுள்ளது. இது ஐடி துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பல டெக் ஜாம்பவான்கள் கூட பணி நீக்கம் செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இன்றும் பிரெஷ்ஷர்களை பணியமர்த்தி வருவது, ஐடி துறையினர் மத்தியில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
டிசிஎஸ்-ன் திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் நிறுவனம், 2024ம் நிதியாண்டில் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தலாம் என தெரிவித்துள்ளது.
இதே விப்ரோ நிறுவனம் மூன்றாவது காலாண்டில் நிகரலாபமாக 30.5 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவானது, ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக 1 ரூபாய் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
மார்ஜின் வளர்ச்சி
விப்ரோ நிறுவனத்தின் வருவாய் விகிதம் 232.3 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 203 பில்லியன் ரூபாயாகவும் இருந்தது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட், மார்ஜின் விகிதம் 120 அடிப்படை புள்ளிகளாகவே மேம்பட்டுள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கையானது தொடர்ந்து 4வது காலாண்டாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பானதொரு உறவு இருந்து வரும் நிலையில், நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
பணியமர்த்தல் திட்டம்
விப்ரோ நிறுவனம் சுமார் 8000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து http://careers.wipro.com/ என்ற தளத்தில் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications